Skip to main content

என் சமையலறையில்..

கத்தி தினம்..




இன்னைக்கு கத்தி தினம்னு (National Knife Day) கேள்விபட்டேன். கத்தி என்றாலே சமையலறை பயன்பாடுதான் முதன்மைபடுத்த படுகிறது நமது நினைவில். அது மட்டும் நினைவில் வந்தால் போதும் என்கிறது அறிவும்.

முன்பெல்லாம் சமையல் கத்திகளின் மீது அத்தனை வேறுபாட்டு சிந்தனை இருந்ததில்லை எனக்கு. நாமெல்லாம் அருவாமனைதானே காய் நறுக்க, மீன் செதில் உரிக்க பயன்படுத்தினோம். அருவாமனையின் பயன்பாடு நம் வாழ்வில் இருந்து பெரும்பாலும் காணாமல் போய்விட்ட ஒரு காலகட்டத்தில், cutting board, knife, cutter போன்ற ஆங்கில சொற்கள் சமையலறைக்குள் நுழையத் தொடங்கின. நானெல்லாம், வரிவரியாய் தடம் விழுந்திருக்கும் எனக்கு மூத்த பெண்களின் விரல்களைப் பார்த்து பயந்து  அருவாமனையில் காய் வெட்டுவதை நிப்பாட்டினேன். கத்தி பயன்படுத்த தொடங்கினேன்.

அதன்பிறகுதான், கத்தியில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது தெரிய தொடங்கியது. நான் சைவவாதி என்பதால், கோழிக்கறி அறுக்கும் கத்திகளை (Boning knife, Carving knife) என் பையன்தான் எனக்கு அறிமுகப்படுத்தினான். Bread Knife, Mincing knife என்பதையெல்லாம் என் கிறித்துவ தோழியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். இப்படியாக என் சமையலறையில் கத்திகள் வரத்தொடங்கின.



கத்தின்னும், அருவான்னும் இருந்தால், அவைகளுக்கு சாணை தீட்டவும் ஆள் வேண்டுமே. நம்ம தெருவுக்கு வரும் சாணை பிடிப்பவர் முன்பெல்லாம் சானை பிடிக்கும் கருவியை உருட்டிக்கொண்டும் தூக்கிகொண்டும் வருவார். இப்போதெல்லாம் மொபெட்டில் வைத்துக்கொண்டு வருவதால், அவர் 'சாணை பிடிக்கலையோ.. சாணை..' என்னும் குரல் ஒரு தெருவில் தொடங்கி அடுத்த தெருவுக்கு ஸ்பீடா போயிடுது.



அதுதான் ஆன்லைனில் விற்கும் சாணை தீட்டும் கருவியை (Knife Sharpener) தோழி ஒருத்தர் பரிந்துரைத்தார். முந்நூறு ரூபாயில் இருந்து கத்தி கூர்படுத்தும் கருவி கிடைக்கிறது. இருந்தாலும் வாங்கவில்லை. நாமளே இப்படி வாங்கி, self content ஆகிடோம்னா, சாணை பிடிக்கும் மனிதர்களைத் தொலைத்துவிடுவோமே என்ற எண்ணம் வருகிறது.



இப்படியாக, என் வீட்டு கத்திகளுக்கு இன்று கத்தி தின வாழ்த்துகள் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்..



~ அகிலா..

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...