Skip to main content

பெரிய பூப்போட்ட சேலை..





பெண்பிள்ளைகளின் சின்ன சின்ன ஆசைகள் பதின் பருவத்தில் அதிகமாய் இருக்கும். அந்த கட்டத்தில்,அதாவது, பாவாடை சட்டை போட்ட வயதில், எங்களுக்கெல்லாம் அக்காமார்கள் கட்டும் தாவணியின் மீது ஒரு கண் இருக்கும்.

தாவணி கட்டத் தொடங்கியபிறகு, அடுத்ததாய் அம்மா கட்டியிருக்கும் சேலையின் மீது மோகம் ஸ்டார்ட் ஆகிரும்.


எண்பதுகளின் காலகட்டத்தில், நமது தமிழ் சினிமா கதாநாயகிகளின் பெரிய பூக்களுடன் பார்டர் வைத்த ஷிப்பான் மற்றும் ஜார்ஜட் புடவைகளின் மீதும் ஒற்றை ரோஜாவின் மீதும் அளவுக்கதிகமான காதல் இருந்தது.

டிவியில் காட்டும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், கதாநாயகியை அந்த சேலையுடன் பார்த்தால், அம்மாவிடம் அப்ளிகேஷன் போடத் தொடங்குவோம்.

அவங்களுக்கு நாம சேலை கட்டனும்ன்னு சொன்னாலே கடுப்பாகி பத்ரகாளி ஆகிருவாங்க. ' முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ளே சேலையாம்...' ன்னு விரட்டிவிட்டுருவாங்க. நாம அம்மாவான பின்னாடிதானே அவங்க கஷ்டம் நமக்கு தெரியுது.

அப்படி இப்படி போராடி ஒரு சேலை வாங்கினால், அதுக்கு இருக்கும் வாழ்வே தனி. பீரோவில், நமக்குன்னு ஒதுக்கிய அறையில் எல்லா துணிகளுக்கும் மேலே அது உட்கார்ந்திருக்கும்.
 

இப்படி இருக்கிற நேரத்தில, பாரின்லேயிருந்து (எந்த பாரின்லேன்னு எல்லாம் கேட்கக்கூடாது, அப்போ அப்படிதான் சொல்லுவாங்க) எங்க சொந்தகாரங்க ஒருத்தங்க, ஒரு பாரின் புடவையைக் கொடுத்துட்டு போனாங்க.

அதன் உடம்பு முழுவதும் குட்டி பூக்கள். கண்ணாடி மாதிரி இருக்கும். அதன் ஸ்பெஷாலிட்டியே அதை மடிச்சா கைக்குட்டை சைஸ்க்கு ஆகிடும். அம்மாவுக்கு அந்த வயசுல அதை கட்ட முடியாதுன்னு அது என்கிட்டே வந்தது. (நாம எந்த வயசுலேயும் எதையும் கட்டுறோம் இப்போ)

ஏதாவது வீட்டு விசேஷங்களுக்கு கூட்டிட்டுப் போகமாட்டாங்களான்னு இருக்கும், அப்போ அதை கட்டிக்க அனுமதி கொடுக்கணுமேன்னு இருக்கும், எப்போடா பள்ளிக்கூடத்தை மூட்டை கட்டிட்டு, காலேஜ் சேருவோம்ன்னு இருக்கும். அப்போதானே கலர் டிரஸ் போடமுடியும்ன்னு தோணும். அதை பார்க்கும் போதெல்லாம், நம்மளை பெரிய மனுஷி ஆகவே விடமாட்டேங்குறாங்களே இந்த அம்மான்னு எரிச்சலாக இருக்கும்.


அதன் வழுவழுப்பை, அப்பப்போ தடவிப் பார்க்கிறது, மெலிசாய் இருக்கும் அதன் ஒரு சைடுக்குள் கையை வைத்து அந்த பக்கம் இந்த பக்கம் கண்ணாடி காட்டுறது இப்படி எல்லாம் நடக்கும்.

நம்ம செய்றதை எல்லாம் பார்த்து நம்ம அம்மாவுக்கு கலவரம் ஆகிடும். வயித்துல புளியைக் கரைக்கும். அதைப் பார்த்தாலே நமக்கு, இரட்டை சடையில் ஒன்றை பின்னிக்கொண்டே பின்னாடி தூக்கி வீசிட்டு ஒரு சந்தோஷத்துடன் நடக்கச் சொல்லும். எல்லாம் சேர்ந்து, திமிரும் சந்தோஷமுமாய் அழகான ஒரு பருவம் அது.

ம்ம்...மீண்டும் வராத மகிழ்வான பருவமும் அதுதான்..

Comments

  1. ஏனோ எனக்கு இந்த மாதிரி தோன்றியதில்லை... அடுத்த பருவ ஆடையை வெறுக்கத்தான் செய்தேன்.... ஆனால் சேலை கட்ட ஆரம்பித்த பிறகு நீங்க சொல்ற அந்த பாரின் சேலை மேல் மிகுந்த ஆசை... அந்த வழவழப்பும், நீளமும் இன்று வரை வேறு எந்த சேலைகளிலும் கிடைக்கவில்லை....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...