Skip to main content

தெருவின் குழந்தை..




நினைவுகளுடனும் கனவுகளுடனும் 
நீ உறங்கும் இடம் தெருவாகிப் போனது..

ஈக்கள் மொய்க்கும் உன் ரணங்களெல்லாம்
கட்டபொம்மனாய் நீ மாறியதாலோ
கள்ளம் மறந்த பால்யதாலோ அல்ல..

உன் கோதாத தலைமுடியும்
கையில் விழுந்திருக்கும் ஒற்றை நாணயமும்
உன் மேனி தழுவிய செல்வந்தர் வீட்டு சொக்காயும்
காலணி கண்டிராத அழுக்கு பாதங்களும்
உன்னை தெருவின் குழந்தையாய்
தார்மீக தத்து கொள்கின்றன

கல்வி பிச்சையிடாமல், காசு பிச்சையிட்டு
புண்ணியம் சம்பாதிக்க விரும்பும் சமுகத்தின்
சாத்வீக வாயிற்படி நீதான்
உனக்கு உறக்கம் ஏன்? எழுவாய்
உன் தாயை அழைக்கும் அழுகுரலில்தான்
நீ பசியாறும் பாக்கியம் பெறுவாய்

தெருவில்,
பிச்சையிடும் பாக்கியவான்கள்
நடக்கத் தொடங்கிவிட்டார்கள்..

Comments

  1. வணக்கம்

    மனதை கனக்கவைக்கும் வரிகள் மின அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு

      Delete
  2. கலங்கச் செய்யும் வரிகள் சகோதரி...
    படமும் வலியைக் கொடுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி குழந்தைகளைப் பார்க்கையில் மனதில் வலிக்கிறது

      Delete
  3. மிகவும் வேதனைப்பட வைக்கும் நிகழ்வு.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் இங்கு சென்னையில் இப்படி நடைபாதை ஓரமாய் அனேக குழந்தைகள். என்று விடிவோ என்றே தோன்றுகிறது அய்யா

      Delete
  4. படிக்க கவிதை அருமையாக இருக்கிறது ஆனால் படித்து முடித்த பின் மனதை சுட்டு ( தொட்டு ) செல்கிறது

    இப்படி பட்ட படங்களை பார்க்கும் போதும் கவிதைகளைபடிக்கும் போது நமது மனம் அப்படியே உச்சு கொட்டிக் கொண்டே எதுவும் செய்ய்ய முடியாமல் நகர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது ...

    ///கல்வி பிச்சையிடாமல், காசு பிச்சையிட்டு
    புண்ணியம் சம்பாதிக்க விரும்பும் சமுகத்தின்///

    //பிச்சையிடும் பாக்கியவான்கள்
    நடக்கத் தொடங்கிவிட்டார்கள்../////

    இந்த வரிகள் அருமை

    பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. இங்கே கவிஞர் படம் பிடித்து காட்டி இருப்பது மனிதர்களில்ன் வாழ்வு நிலை ..அவ்வுளவுதான் ..இதில் நான் நீ என்பதெல்லாம் போலி வேஷம் இருப்பதாய் வைத்து இன்பம் காணுவோம் ...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...