Skip to main content

காது குத்தல்....



சிவப்பும் மஞ்சளும் பச்சையுமான பட்டில்
தலை நிறைய பூவோடு
பெரிய குங்கும பொட்டோடு
பெண்களும்.....

வெள்ளை பூ வேட்டியுமாக
சின்ன கீற்றாய் விபூதியுமாக
ஆண்களும்.....

பெரிய கண்களோடு குலசாமியும்
மீசை முறுக்கோடு பூசாரியும்
எலுமிச்சை தலையோடு அரிவாளும்
எல்லாமே பக்தி முத்திப் போய் இருக்க

ஆடு மட்டும்
மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப்போல
தலை குனிந்து கண் நிறைய பயத்தோடு....


வாயில்லா ஜீவனை வெட்டி
சாமிக்கு படையலிட்டு
அவரின் பெயரால்
இவர்கள் சாப்பிட்டு
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று
ஜீவகாருண்யத்துடன் வள்ளலாரையும்
சேர்த்து புதைத்து
சந்தோஷமாய் காது குத்தி திரும்புவார்கள்
இந்த புண்ணியவான்கள்......



Comments

  1. உங்களுக்கு ஐந்தறிவு ஜீவன்கள் மேலுள்ள பாசம் புரிந்து கொள்ள முடிகின்றது சகோதரியே தாவரங்களும் சுவாசிகின்றனவே அதன் இல்லை தழை காய் கனிகளை கொய்து மனிதன் பசி தேவைகளைபூர்த்தி செய்து கொள்கின்றானே அது கூட பாவம் தானே அதற்கு வள்ளலார் மட்டும் என்ன விதி விலக்கா என்ன ?

    ReplyDelete
    Replies
    1. தாவரங்கள் நம் கண் பார்த்து அதன் அன்பை வெளிப்படுத்துவதில்லை....நாம் சற்று வாடினால் கூட நம் வீட்டு செல்ல நாயும் வாடிவிடுமே. அன்பை பகிரும் உயிர்களை கொல்வது பாவம் இல்லையா...

      Delete
  2. இதுவும் பண்பாடு கலாசாரம் ?

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்ல மாட்டேன். அடுத்த உயிர்களையும் தன் உயிர் போல் இவர்கள் நினைக்க வேண்டும். வலி போதுதானே கண்ணதாசன்...

      Delete
  3. இல்ல ஒரு வரி எனக்கு புரிய வில்லை
    //ஆடு மட்டும்
    மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப்போல
    தலை குனிந்து கண் நிறைய பயத்தோடு....//

    பெண்ணை போலவா இல்லை ஆணை போலவா ...
    கொஞ்சம் டவுட் அதுதான் கேட்டேன் ...

    ReplyDelete
  4. வள்ளலார் பத்தி சொல்லும்போதுதான் அவங்க செய்கிற சில விசங்களிலும் தெளிவு வேண்டும் வள்ளலாரை போல அவர் அவதார நோக்கம் பத்தி வாதம் செய்து கொண்டு இருந்தேன் ..பலர் என்னைவிட வயதில் பெரியவர்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடிந்த எனக்கு அதில் ஒரு சிறுவயது பையன் நீங்கள் முதலில் மாமிச உணவு உட் கொள்வீர்களா என்றார் ஆமாம் ..என்றேன் ..நீங்கள் ஆன்மிகம் பேசவே லாயக்கு இல்லை என்று என் ஒட்டு மொத்தமா அவுட் ஆகிட்டான் ...அதுமாதிரி உயிர் வதை செய்கிரவங்களை ..உங்கள் கவிதை மூலம் அவுட் ..ஆகிவிடீங்க ...பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  5. பிராணி வதையை இதைவிட யாரும் சிறப்பாக சொல்ல முடியாது, அகிலா!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி மேம்.....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...