Skip to main content

நீ என்




நீ என்...

நிலவென நினைத்து எட்டிப் பார்த்தேன்
தென்றலென நினைத்து தொட்டு பார்த்தேன்
பூவென்று நினைத்து பறித்து பார்த்தேன்
சங்கீதமென நினைத்து பாடி பார்த்தேன்
பசியென நினைத்து சாப்பிட்டு பார்த்தேன்
மௌனமென நினைத்து பேசிப் பார்த்தேன்
சந்தொஷமென நினைத்து சிரித்து பார்த்தேன்
ஒவ்வொன்றாக நினைத்தும் ஒன்றுக்குள்ளும் இல்லை நீ
உன்னிடமே கேட்டேன்
காதலென நினைத்து பார்
கச்சிதமாய் பொருந்துவேன் என்றாய்

காதலாய் நினைத்து பார்த்தேன்
சில்லென்ற காற்றை
உன் சிலிர்க்கும் கூந்தலை
அதில் சிரிக்கும் ஒற்றை ரோஜாவை
சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
குடையாய் நனையும் மரங்களை
நெடுமரமாய் நிற்கும் ஒளிவிளக்குகளை
அவசரமாய் கரையை தொடும் அலைகளை
நிலவை பார்த்து கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
உறக்கம் கலையாதிருக்கும் படகுகளை
கால்களை உள்ளிழுக்கும் மணற்பரப்பை
காதலுடன் நினைத்து பார்த்தேன்
உன்னைத்தவிர அணைத்தையும் காதலாய் பார்த்தேன்
உன்னிடம் காதல் வரவில்லை கண்ணே....


Comments

  1. ம்ம் வித்தியாசம் :)

    //
    சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
    குடையாய் நனையும் மரங்களை
    //

    நல்ல சிந்தனை!

    ReplyDelete
  2. அகிலா வரிகளில் நெளியும் வார்த்தைகளின் தேர்வு பிரமிக்க வைக்கிறது அருமை பாராட்டுக்கள்


    "சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
    குடையாய் நனையும் மரங்களை
    நெடுமரமாய் நிற்கும் ஒளிவிளக்குகளை

    நிலவை பார்த்து கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
    உறக்கம் கலையாதிருக்கும் படகுகளை
    கால்களை உள்ளிழுக்கும் மணற்பரப்பை"

    ரசித்தேன் இந்த வரிகளை ......

    காதல் வந்தாலே அனைத்தும் வந்துவிடும் அப்படித்தான தோழி ..........

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...உண்மைதான் சரளா...
      உணர்ந்துவிடலாம் அனைத்தையும்....

      Delete
  3. ரசனைக்குரிய விஷயங்கள் அனைத்தும் காதல் என்று வந்துவிட்டால் ஒத்துப் போவது விந்தையான விஷயம்தான். அருமையான, ரசிக்க வைத்த கவிதைங்க, சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. காதலியை இரண்டாம்பட்சமாக்கும் இயற்கை ரசிப்புதானே...
      நன்றி பாலகணேஷ்...

      Delete
  4. வித்தியாசமான வரிகள்... பாராட்டுக்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...வலைசரத்தை பார்த்துவிட்டேன்...

      Delete
  5. Nalvaalthu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  6. வார்த்தகளை வெகு கச்சிதமாகக் கோர்த்து கவிதை வரையும் உங்கள் பாணி மிகவும் நன்றாக இருக்கிறது, அகிலா.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நன்றி வேதா...

    ReplyDelete
  8. உங்களின் வருகைக்கு நன்றி ரஞ்சனி மேம்....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...