Skip to main content

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா



கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன்.



கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர்.

Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர்.


அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டுக்காக, அந்த கவிதையில், இரண்டு stanzas மட்டும் எடுத்திருக்கிறேன்..

1. Angel Flores:

It happens that I'm tired of being a man.
It happens I go into tailor shops and movies
withered, impenetrable, like a swan of felt
navigating a water of origins and ashes.
The odor of barber shops makes me weep aloud.
I just want a rest from stones or wool,
I just want not to see establishments or gardens
or elevators, or merchandise, or eyeglasses.

2. Leonard Grucci:

It happens that I am weary of being man.
It happens that I enter tailor shops and movies
faded, impenetrable, like a swan of felt
swimming in spring water and ashes
The odor of barber shops makes me weep aloud.
I alone want quiet of stones and wool,
I alone want to see neither establishments nor gardens,
nor wares, nor spectacles, nor elevators.

3. H R Hays:

It so happens I am tired of being a man.
It so happens, going into tailorshops and movies,
I am withered, impervious, like a swan of felt
navigating a water of beginnings and ashes.
The smell of barbershops makes me weep aloud.
I want is a rest from stones or wool,
all I want is to see no establishments or gardens,
no merchandise or goggles or elevators

கிட்டத்தட்ட எல்லோரும், அந்த கவிதை மொழிபெயர்ப்பில், சொல்லி வைத்த மாதிரி சில சொற்களை மட்டும் கலைத்துப்போட்டு எழுதிக்கொண்டிருக்க, Ben Belitt 1961 யில் அன்றைய அமெரிக்காவின் புதிய மொழியில், ஸ்டைல்லிஷாக மொழிபெயர்க்கிறார். அந்த சொற்கள் திரும்பி பார்க்க வைக்கின்றன.

4. Ben Belitt:

It so happens I'm tired of just being a man.
I go to a movie, drop in at the tailor's—it so happens—
feeling wizened and numbed, like a big, wooly swan,
awash on an ocean of clinkers and causes.
A whiff from a barbershop does it: I yell bloody murder.
All I ask is a little vacation from things: from boulders and woolens, from gardens, institutional projects, merchandise
eyeglasses, elevators—I'd rather not look at them.

water என்பதை ocean ஆக்குகிறார்.
swan of felt - a big wooly swan
bloody murder, institutional projects என்பதாக சொற்களைக் கொண்டு அலங்கரிக்கிறார். கவிதையின் Paraphrase structure, மொழிநடையில் dynamic equivalence எல்லாம் கொடுத்து கவிதையை வேறு தளத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார். இவரை பின்தொடர்ந்து Merwin, Bly போன்றோரும் செய்கிறார்கள்.

நெருடா உயிருடன் இருந்தவரை, தனது ஸ்பானிஷ் கவிதைகளின் முழுமைக்கு எந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் ஈடில்லை என்று சொன்னார். அவரே ஆங்கிலம் அறிந்தவர்தான். Blake யையும் Whitman யையும் விரும்பி வாசித்தவர்தான்.

எனக்கு, William O'Daly யின் மொழிபெயர்ப்பு பிடிக்கும். அவர் மொழிபெயர்த்த பாப்லோ நெருடாவின் கவிதைகள் எட்டு தொகுப்புக்களாக வெளிவந்திருக்கின்றன. Daly, நெருடாவின் இறப்புக்குப் பின்னரே (1973), 1980, 90களில் தான் நெருடாவின் கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்குகிறார். ஆனால் அவர் இந்த Walking Around கவிதையை மொழிபெயர்க்கவேயில்லை.

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி