Skip to main content

காட்டிடைவெளி (மின் புத்தகம்)

 

காட்டிடைவெளி (மின் புத்தகம்)

ஆசிரியர் : அகிலா 





'காட்டிடைவெளி' என்னும் இந்த புத்தகம், ஒரு மனதின் பயணம். நாம் நடந்துக் கொண்டே இருக்கும்போது, நம் மனமும் அதற்கான ஒரு பாதையில் நடக்கத்தொடங்கும். அதன் சுவாரசியங்கள், விருப்பங்கள், புன்னகைகள், அழுகை எல்லாம் தனி. அவற்றை எல்லாம் இந்த புத்தகத்தில் வாசிக்கலாம். 

இந்த புத்தகம் கொரோனா காலத்தில் வெளிவருகிறது. என்னுடைய 'தவ்வை' நாவல், 'இங்கிலாந்தில் 100 நாட்கள்' பயண இலக்கியம் இவை அச்சில் ஏறியபிறகு, என் கையிருப்பு இன்னொரு புத்தகத்தை அச்சில் ஏற்ற முடியாத சூழலில், மனம் நோக்கிய பயணத்தை எழுதிய இப்புத்தகம் அமேசான் கிண்டிலில் (Amazon Kindle) வெளிவருகிறது. 

விலை : ரூ 80 

அமேசான் அன்லிமிடெட் ஆப்ஷனில் நீங்கள் இருந்தால் இலவசமாக வாசித்துக் கொள்ளலாம். 



புத்தகத்தின் என்னுரையில் இருந்து சில துளிகள் இங்கே உங்களுக்கு..   

வனாந்திரத்தின் ஊடான அடர்த்தியில் நடப்பது கடினமும் இயல்பானதும் ஆகும். கடினம் எவ்வாறு இயல்பானது ஆகும்? பாதைகள் ஒழுங்கற்று, பயம் சூழ்ந்து, எங்கு இட்டுச்செல்லும் என்பதறியா உணர்வு நடப்பதைக் கடினப்படுத்தும். ஆனால் வியாபித்திருக்கும் காடு நம் உள்ளிருக்கும் மரபணுக்களின் உயிர்மம் நீ காட்டிலிருந்து வந்தவன் என இயல்பாக்கும். மனதின் உணர்வும் உடலின் உயிர்மமும் சேர வாய்த்தவன் மனிதன். கடினமும் இயல்புமாய் வனாந்திரத்தின் வாழ்வைச் சுமந்துக்கொண்டு நடக்கிறேன்.  


நடத்தல் என் இயல்பான செயல். பெருவிருப்பமும் கூட. என்னுடைய உள் மனதின் அலைகளுடன் கைக்கோர்த்துக்கொண்டே உலாவுதல் சுகம். தனியாகவே நடக்க விழைவேன் நான். யாரேனும் உடன் வந்தால் என் எண்ண ஓட்டங்களில் குறுக்கீடுகள் இருக்கும்; சமரசம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தும்; என் தனிப்பட்ட நேரத்தை காயப்படுத்திச் செல்லும். தனியே நடத்தல் நம் சுயம் சாகாமல் உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.

 

வழக்கமான பாதையாய் இருந்தாலும் மனம் மட்டும் ஒரு வனாந்திரப் பயணத்தை மேற்கொள்ளும். ஒத்தையடி பாதைகளில்லா தடம் அது. பெயர் அறியா பறவைகளின் குரலுக்குள் யாரையும் தேடவியலா சுகம் அது. நடக்கும் காலின் தொடக்கம் வரை, வளர்ந்து நிற்கும் புற்களைத் தழுவும் கைகளில் உராயும், பச்சயம் அது. பாதை தேடி அலைந்து சலித்து சட்டென திறக்கும் வெட்டவெளியில் முகமும் மனமும் ஒருசேர ஆசுவாசப்படும் பொழுதைச் சுமக்கும் சமன்தான் காட்டிடைவெளி. காட்டின் இடையில் அது புல்வெளி சுமந்த தளம்; சூரியனை வெளிச்சப்படுத்தும் ஆசுவாசம்; அவ்விடத்தின் அடிபுற்களின் வாசம் என் சுவாசமாகும். அந்த காட்டிடைவெளியே இந்த புத்தகமும்.

 

காடாய் கிடக்கும் மனதிற்கு சிறிது வெளிச்சமும் வெளியும் ஆறுதல்படுத்தும் சுகம் பேரழகு தானே. எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, நடந்துக்கொண்டே சுவாசிக்க இனி இந்த காட்டிடைவெளி போதும். நடையின் இடையில் இளைப்பாறும் சமயம், தனியிடம் அமர்ந்து வாசிக்கத்தொடங்கலாம்.

 

லிங்க் : காட்டிடைவெளி 


வாசித்து சொல்லலாம்.. உங்க கருத்தை.. 

 


அகிலா.. 


 

      

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...