Skip to main content

The Queen (க்யூயின்)

The Queen (க்யூயின்)

~ அகிலா 





சக்தி, ஜி எம் ஆர் என்னும் புனைப்பெயரில் நமக்கு அறிமுகமான முன்னாள் முதல்வர்கள் இருவரை நிஜ பாத்திரங்களாக உலவவிட்டு பார்த்த 'க்யூயின்' (Queen) வெப் சீரிஸ் எல்லாம் நம்ம ஊருக்கு புதுசு. 

சமீபத்துல நெட்பிளிக்ஸ்ல ஜீசஸை gay ன்னு காமெடி செய்துட்டாங்கன்னு பிரேசிலில் கலாட்டா செய்துட்டாங்க. நம்ம ஊரில் இன்னும் இல்ல. இது சம்பந்தமான வழக்கையும் இயக்குனர் கௌதம் 'அது நாவலின் காப்பி' என்று சொல்லி சரிசெய்துவிட்டார். மற்றபடி கொஞ்சம் சிலவற்றை மாத்தி சீன் பண்ணியிருந்தாலும் பெரும்பாலும் அவங்க வாழ்க்கையைக் கார்பன் காப்பி வச்சு எடுத்திருக்காங்க.

'க்யூயின்' சீரிஸில் எல்லாமே க்வீஸ் மாதிரி. பெயரை வைத்து நாம நிஜ கேரக்டரைக் கண்டுபிடிக்கிற வேலை. நல்லாதான் இருக்கு..

அனிதா சிவகுமரன் நாவல், 'The Queen' என்பதை Web Series ஆக தமிழில் எடுத்திருக்கிறார்கள். கௌதம் மேனன்(VTV - வி தா வ), பிரகாஷ் முருகேசன் (கிடாரி) இருவரின் இயக்கமும் இதில் இருக்கிறது. ஸ்கிரிப்ட் ரேஷ்மா கட்டாலா (நீதானே என் பொன் வசந்தம்) வசனங்கள் தெறிக்கிறது. 



அனிதா சிவகுமரன்



கௌதம் வாசுதேவன் 




பிரகாஷ் முருகேசன் 



ரேஷ்மா கட்டாலா 





ஜி எம் ஆர் ஆக வருகிற இந்திரஜித்.. குழி விழுந்த சிரிப்பு, வசீகர கண்கள்.. 'Anyone can fall for him' என்பதை செய்துக்காட்டியிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன்.. சான்ஸே இல்ல.. கம்பீரம், சோகம், மகிழ்ச்சி எல்லாம் அந்த முகத்தில்.. நிஜம் நம் முன்..

வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், அஞ்சனா எல்லோரும் ஓகே. சக்தியின் 'தோழி' சூரியகலாவாக வரும் விஜி சந்திரசேகர் சற்று சத்தத்தைக் குறைத்திருக்கலாம். 




















பிரதீபன் (தீபன்) மட்டும்தான் பெண் சமூகத்துக்கே எதிரி என்பது போன்ற ஒரு projection. ஜி எம் ஆரின் சாவு வீட்டில் பிரதீபனும் சக்தியும் பேசிக்கொள்ளும் அதிகப்படியான காட்சியமைப்பைத் தவிர்த்திருக்கலாம். ஏன்னா, அங்க நடந்த அத்தனையையும் டிவியில் பார்த்த சாட்சிகள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் இன்னும் உயிரோடுதான் இருக்காங்க. அன்று அவங்க கிட்டே இருந்த ஆவேசம் தான் அவங்களின் இந்த உச்சிக்குக் காரணம். அதுதான் அவங்க குணம். இதில் ரொம்ப சாத்வீகமா அழுத்தமா காட்சி அமைப்பு மாறியதைப் பார்த்தபோது சீசன் 1 முடிவு காட்சிகள் மனதில் இலேசாகதான் பதிந்தன. அதற்கு முன்பு இருந்த கதை அழுத்தம், ரம்யா கிருஷ்ணனின் முகபாவங்களின் தீவிரம், உச்சரிப்பு வலிமை எல்லாமே சற்றென்று சரிந்தாற் போல் ஆனது. 

சக்தியின் வாழ்க்கைக் குறித்த நிறைய மர்மமுடிச்சுகளுக்கு பல வருடங்களாக மக்களாகத் தேடிய விடைகள் எல்லாம் எளிதாய் உடைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. நான் வாசந்தியின் 'Amma :Jayalalithaa's Journey From Movie Star To Political Queen' படித்திருக்கிறேன். கொஞ்சம் அதிலிருந்தும் கதை உருவப்பட்டிருக்கிறது தெரிகிறது. 

ஒரு காலகட்டத்தில் காதல், காதல் தோல்வி, காமம் குறித்த பல விஷயங்கள் ஒளித்தும் மறைத்தும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய மனிதர்களின் செயலாளர்கள், அவர்களின் கீழ் பணியாற்றியவர்கள், அரசியல் சதிராட்டத்தில் எதிர்களத்தில் நின்றவர்கள் இப்படியாக பலர் எழுதி வெளிவந்த உண்மையும் பொய்யும் கலந்த வாழ்க்கை சரித்திரங்கள் நம்மிடையே புழங்கத் தொடங்கிய பிறகுதான், பெரிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் எட்டிப்பார்க்க அசிங்கப்படுத்த அவசியமில்லையெனும் அறிவு முதிர்வு (civilized / matured attitude) நமக்கு வந்தது எனலாம். 

காந்தி, நேரு, இந்திராகாந்தியென அடுத்தடுத்த புத்தகங்கள் வாசிப்பின் பிறகுதான் உன்னதம் என்பது யாதென்ற புரிதல் உண்டானது. 
'க்யூயின்' சீரிஸையும் அப்படியான நோக்கில்தான் எடுத்திருக்கிறார்கள். இது போன்ற காணொளிகள், பெண், பெண் சார்ந்த வியாபாரத்தன்மை, பெண்ணை பழிக்கும் ஆணின் மூளையுடன் இயங்கும் பெண்ணுலகம், பெண்ணின் மீது ஆண் செலுத்தும் அதிகாரதன்மை போன்ற பல வெளிகளை அசாத்திய கோணங்களில் அணுக சொல்லித்தருகிறது எனலாம். 

கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இருவருக்கும் வாழ்த்துகள்..

தமிழில் இன்னும் எதிர்ப்பார்ப்போம்.. 





~ அகிலா.. 






Comments

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...