Skip to main content

கதைகளை வாசித்தல்..

💢 கதை வாசிப்பு தினம் 💢 

~ அகிலா.. 👧



நான் பேசும் பெரும்பாலான மேடைகளில் இலக்கியத்தை ஏதாவது ஒருவகையில் உள்ளே திணித்துவிடுவது வழக்கம். இலக்கியத்தில் இருக்கும் சிறுகதைகள், மேலாண்மை பொன்னுசாமி, சுந்தர ராமசாமி, அம்பை, வாஸந்தி முதல் எஸ் ரா, பவா செல்லத்துரை, கா சி தமிழ்க்குமரன், பாரதி கிருஷ்ணகுமார், கலைச்செல்வி, என்னுடையது மற்றும் பலருடையது வரை நான்கைந்து கதைகளைச் சொல்லிவிடுவதும் அதிலிருக்கும் சமூகப்பிரச்சனை குறித்து பேசுவதும் உண்டு.
பள்ளி, கல்லூரி கூட்டங்கள் என்றால், கல்லூரி நிர்வாகத்தால், ஆசிரியர்களால் பிடித்து இருத்தப்பட்டவர்கள் என்றாலும், பிள்ளைகள் தலையசைத்து ஆமோதித்தும் கண்விரித்தும் குறிப்பெடுத்தும் உள்வாங்குவது தெரியும். பேசி முடித்தும் சில பிள்ளைகள் தேடிவந்தும் பேசுவதும் உண்டு. சில நிகழ்வுகள் கருத்து பரிமாற்ற கூட்டமாய் மாறியதும் உண்டு.

இலக்கிய கூட்டங்கள் என்றால், கேட்கவே வேண்டாம். கவனிப்பும் ஆமோதிப்பும் உடன் சில சமயங்களில் எதிர்ப்பும் இருக்கும். அதுவும் நல்ல ஒரு விவாதக்களம் தானே.

பொதுவிழாக்கள் என்றால் இதற்கெல்லாம் நேரெதிர். படித்தவர்கள், பள்ளி படிப்பைத் தாண்டாதவர்கள், பள்ளி படிகளைத் தொடாதவர்கள் அங்கு இருப்பது உண்டு. நாம் பேசும்போது, கதை சொல்லும்போது ஒரு ஆமோதிப்போ எதிர்ப்போ இல்லாமல் பிடித்து வைத்த மாதிரி இருப்பார்கள். இத்தனைக்கும் பள்ளி கல்லூரி மாதிரி இல்லாமல் சுயமாய் அவர்களாகவே வந்திருப்பார்கள்.

ஒருமுறை என்னுடன் பேச அழைக்கப்பட்டிருந்த பெண்மணியொருவர், அவர் பேசி முடித்து வந்து அமரும்போது என்னிடம் கேட்டார், 'என்ன இப்படி ரெஸ்பான்ஸே இல்லாம இருக்காங்க..' என்று. நிஜம்தான் என்று தோன்றியது. இதற்காகவே நான் கதைகள் சொல்லும்போது, 'சரிதானே?' என்று கேட்டு ஒரு சில தலையாட்டல்களையாவது வாங்குவதுண்டு. அதற்காகவே கதைகளைச் சொல்வதுண்டு. இலக்கியம் என்றாலே என்ன விலை என்று கேட்கும் அனேகர் உண்டு இங்கு. அவர்களிடம் ஒரு சில எழுத்தாளர்களையும் அவர்களின் கதைகளையும் சொல்லி அவர்களை பொதுஜனத்திடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாய் இதை நினைக்கிறேன்.

சில கூட்டங்களில் பேசும்போது, 'நான் இன்னைக்கு நிறைய கவிஞர்களின் எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்ல போகிறேன். கவனிச்சு குறிச்சுக்கோங்க..'   என்று சொல்வதும் உண்டு. ஏனென்றால், நம்ம தமிழ் மக்களுக்கு தெரிந்த ஒரே கவிஞர் யார் தெரியுமா.. வைரமுத்து மட்டுமே. சினிமா அறிமுகப்படுத்துபவர்களும், செந்தமிழில் உரையாற்றுபவர்கள் மட்டுமே கவிஞர்கள் என்று அவங்க தலையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கு.

இலக்கியத்தை, அதை மட்டும் சுவாசித்து வாழும் அக்மார்க் இலக்கியவாதிகளை பொதுஜனத்துக்கிட்டே கொண்டு போகும் ஒரு முயற்சிதான் இது. இலக்கியமாவது புடலங்காவாவது என்னும் மக்களிடம் அறிமுகமாவோம் நம் கவிதைகள், கதைகள் வழியாக.. 

என் கதை வாசிப்பு சேனல்


Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...