Skip to main content

பிக் பாஸ் - சிக்கல்கள்

பிக் பாஸ்
~ அகிலா..





எழுதிவைத்து நடத்தப்படுகிறதோ எழுதாமலே நடத்தப்படுகிறதோ, எதுவாகினும் மனித உறவுகளை வைத்து பின்னப்படும் நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன பிக் பாஸில்.

நிஜத்தில், இம்மாதிரி நடந்தேற நாட்கள் பிடிக்கலாம். இன்னும் பல சூழல் சிக்கல்கள் இடைபுகலாம். அதிகமான மனிதர்கள் உட்புகலாம்.

அதுமாதிரி அல்லாமல், குறிப்பிட்ட சூழலுக்குள், எண்ணிக்கையில் சிறியதான நபர்களிடையே நடைபெறுவதால், அவரவர் இயல்புகளுடன் கலந்து, அதனுடன் எழுதி இயற்றப்பட்டவையும் சேர்ந்து சீக்கிரம் அரங்கேறுகின்றன. பொழுதுபோக்குக்கான சிறப்பாய் தெரிகின்றன.

சீரியல் என்னும் நெடுந்தொடரை விட இது சட்சட்டென்று, முடிவுகள் முகமாற்றங்களுடன் வெளிபடுவதால், மக்கள் அதை பார்ப்பதை விடுத்து, இதற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும் ஒருவகையில் நல்லதே. யாரை எப்படி விஷம் வைத்து கொல்வது என்று பத்து நாட்களாய் திட்டமிடுதல் குறைக்கப்படுகிறது.

இதிலிருக்கும் கதாபாத்திரங்கள் தங்களை மற்றும் தங்களைப் போன்றோரை ஒத்திருப்பதால் சுலபமாய் அந்த வீட்டிற்குள் இவர்களாலும் அவர்களுடன் வாழமுடிகிறது. தாங்கள் திரையில் பெரிதாய் உருவகப்படுத்தி பார்த்த யாரும் நம்மை விட மேம்பட்டவர்கள் இல்லையெனும் சமாதானமும் பிறக்கிறது.

தவறேதுமில்லைதான். இருந்தும், ஒரு பெரிய மனசிக்கல் உள்ள வாழ்க்கை முறையை நமக்கு இது காட்டுகிறது. உளரீதியான பிரச்சனைகள் சில மட்டுமே அலசப்பட்டு, அதுவும் கூட சரியான முறையில் தீர்வு எட்டப்படாமல் ஆங்காங்கே மூடப்பட்டு, செய்பவர்கள் வெளியேற்றப்பட்டு, கிட்டத்தட்ட கருவினுள் இருந்து காது கொடுத்து கேட்டும் முழுமையடையாமல், போர் வியூகத்தின் நடுவில் உயிர்துறந்த அபிமன்யுவை நினைவூட்டவும் அச்சமூட்டவும் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

#பிக்பாஸ்
#BigBoss
#Big_Boss


Comments

  1. ஒருவகையில் நல்லதே... ஆனால்...

    திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்..
    திருடும் கையைக் கட்டி வச்சாலும்...
    தேடும் காதைத் திருகி வச்சாலும்...
    ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்...

    மாறாதய்யா மாறாது...
    மனமும் குணமும் மாறாது...
    துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்...
    தூய தங்கம் தீயில் வெந்தாலும்…

    மாறாதய்யா மாறாது...
    மனமும் குணமும் மாறாது...


    - கவிஞர் கண்ணதாசன்

    ReplyDelete
  2. இன்றைக்கு தமிழ் நாட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது பிக்பாஸ்தான்.

    இது எதில் கொண்டு போய் விடுமோ...?

    - கில்லர்ஜி

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...