Skip to main content

பணபுழக்கமும் சிக்கனமும்..

மக்களும் பணமும்..



நமது இந்திய அரசின் புது பொருளாதார அதிரடி திட்டத்தின்படி, நவம்பர் 8ஆம் தேதி இரவிலிருந்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டதும் 500 மற்றும் 2000 புது ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டதும்ந நாம் அறிந்ததே. இந்த பரிமாற்றம் நடந்து நாடு சமன் பெற அதிக நாட்கள் எடுக்கலாம்.

வங்கிகளில் இருக்கும் நம் பணமே நம் கைக்கு வந்து சேர ஆகும் தாமதமும் இதில் அடங்கும்.

பண மாற்றம் வந்த இந்த ஐந்து நாட்களில் கையிலிருக்கும் நூறு ரூபாய் தாள்களை அனாயாசமாக செலவழிக்காமல் பார்த்துக்கொள்ள நான் பட்ட கஷ்டம். பழையபடி சிக்கனத்துக்குள் நுழைந்திருக்கிறேன். முதலில் சிரமமாக இருந்தாலும் இந்த இரண்டு நாட்களாக பழகிவிட்டது.

சாலையின் ஓரத்தில் விரித்திருந்த கடையில் என்னை ஈர்த்த டெரகோட்டா பொம்மைகளை வாங்காமல் வந்தது.

ஆட்டோ பிடிப்பதற்கு பதில் நடந்துச் சென்றது.

மத்திய வர்க்கம் கீழ்வர்க்கம் என்னும் நிலை மாறி அனைவரும் சமமென தனி சலுகைகள் மறந்து வங்கிகளில் வால் பிடித்து நின்றது.

இதில் ஆட்டோ ஓட்டுனரும் கைவினைக்காரரும் பாதிக்கப்பட்டாலும் என் வீட்டிற்கும் உடம்பிற்கும் எண்ணங்களுக்கும் நல்லதைத்தானே செய்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சி இருக்கிறது.


நம்மால் முடியாதபட்சத்தில் அதிகாரமாய் திணிக்கப்பட்ட ஒன்றை ஏற்றுக்கொள்ளுதல் என்பது நமக்கு பழக்கப்பட்டதுதானே.

சில நேரங்களில் சில விஷயங்களில் அதிரடிகளும் தேவையாகிறது, ஊருக்கு போயிருக்கும் மனைவி சடாலென வந்து நிற்பது போல... அது ஒரு இனிப்பும் உவர்ப்பும் கொண்ட விஷயம். ஏற்றுக்கொண்டு அந்த மனநிலைக்கு மாறுவதில்லையா..அதேபோலவே இதுவும்.


பண முதலைகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் பொதுமக்களாகிய நாம் சிக்கனத்தை கற்றுக்கொண்டதும், அனைவரும் ஒரே இடத்தில்தான் என்னும் மனப்பாங்கையும் வர்க்க ஏற்றத்தாழ்வுகள் சற்று மறைந்து எல்லோரிடமும் சகஜமாய் பேசும் உணர்வையும் வளர்த்துக்கொண்டதையும் வரவேற்கத்தான் வேண்டும்.


காவி கட்டியவர் என்னும் பார்வையை விடுத்து, நாட்டின் பிரதமர் என்னும் நோக்கில் அவரின் செயல்களை கவனிப்போம். மீறினால் குரல் கொடுப்போம். மீறாதவரை பொறுமை காப்போம்.

~ அகிலா..

Comments

  1. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் அன்பும் அய்யா

      Delete
    2. நன்றியும் அன்பும் அய்யா

      Delete
  2. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...