Skip to main content

இந்திய குடியரசு தினம்

குடியரசு தின வாழ்த்துகள் 



இன்று நமது இந்தியாவின் 67வது குடியரசு தினம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயலாக்கப்பட்ட நாள் இது. 66 வருடங்களுக்கு முன்பு முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் கொடி ஏற்றி குடியரசை துவக்கி வைத்த  நாள்.

சுதந்திர தினம் என்பது நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள். நம் நாட்டுக்காக அநேகம் பேர் தியாகம் செய்து கிடைத்த வரலாறு கொண்ட நாள். நம்மை உணர்பூர்வமாய் பினைக்கக்கூடிய ஒன்று.

ஆனால் குடியரசு தினமோ பெரும்பாலும் வெறும் ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த ஜனவரி மாதத்தில் குளிரும் பனியும் போட்டி போடும் டில்லியில், பிரதமர் அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைக்க, குடியரசு தலைவர் கொடி ஏற்றுவதும் விமானங்கள் பூ தூவுவதும், முப்படைகள் அணிவகுப்பதும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் பார்வையிடுவதும், வீர சாகசங்களுக்காய் விருதுகள் வழங்கப்படுவதுமாக கொண்டாட்டங்கள் ஆகவே நகர்ந்து அது முடிந்தும் விடுகிறது. அதன் பிறகு நம்ம டிவியில் வேறு சேனல் திருப்பி, இன்றைய விடுமுறை நாளை சினிமாக்களோடும் சினிமா நட்சத்திரங்களோடும் கொண்டாடி முடிப்போம்.   

தீபாவளி பொங்கலை போல் ஏதோ ஒரு பண்டிகை அல்ல குடியரசு தினம் என்பது. நம் இந்திய அரசியல் சாசனம் Dr. அம்பேத்கர் அவர்களை முதன்மையாளராக கொண்டு வரையப்பட்டு அங்கீகரிப்பட்ட தினம். உலகின் மிக பெரிய ஜனநாயகமாக நம் பாரதம் உருவாகிய தினம். பல மொழிகள், பலவிதமான கலாசார விகிதங்களும் கொண்ட 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேஷங்களையும் கொண்டது. எனினும் ஒரே பாரதமாக நிமிர்ந்து நிற்கிறது.

கடந்த வருடங்களில் முதல் முயற்சியிலேயே ISRO Mars Mission, மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்டது, 100 Smart Cities, அதிவிரைவு புள்ளட் ட்ரைன், சுத்தம் போற்றுதல் போன்று எத்தனையோ முன்னேற்றங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டாலும் இன்றைய தேதியில் நாம் இன்னும் ஏழ்மை, லஞ்சம், சுகாதாரமின்மை, எல்லோருக்குமான கல்வி மற்றும் மருத்துவ வசதி, விவசாயமும் விளைநிலங்களும் குறைந்து வருதல், அதனால் ஏழை விவசாயிகளின் தற்கொலைகள், பெண்களின் முன்னேற்றத்தில் தடைகற்களாய் பாலியல் வன்முறைகள் போன்ற நிறைய விஷயங்களில் போராடி வருகிறோம்.

இந்த குடியரசு தினத்தன்று நாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள்
குடியரசு என்றால் என்ன...
குடி மக்களுக்கான அரசு என்பது. அந்த அரசு எங்கிருந்து வருகிறது. நாமதான் நல்லவிதமாக அரசை செயல்படுத்துபவர்களாக இருப்பவர்களை தேர்ந்தெடுத்து பதவி ஏற்றுகிறோம்.

சரி, நாம நல்ல குடிமக்களாய் இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்த்தால், மூன்று கேள்விகள்தான்..

முதலில், தேர்தலில் நமது வாக்கை பதிவு செய்கிறோமா...
பெரும்பாலும் அரசியல்வாதிகளைக் குறை சொல்லிவிட்டு பேசாமல் இருந்துகிறோம். பிடித்தவர்களுக்கு ஓட்டளிக்கவும், பிடிக்கவில்லை என்பதை சொல்லவும் கூட நமக்கு உரிமை இருக்கு. அதையும் நாம் எடுத்துரைக்கலாம். ஓட்டுரிமையை மறுத்தல் நல்ல குடிமக்களுக்கு அழகல்ல.


இரண்டாவதாய், பெண்களுக்கான மரியாதையையும் தளத்தையும் ஏற்படுத்திக்  கொடுக்கிறோமா..

பெண்கள்...இன்றைய இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களின் வாழ்வு நிலை அப்படியே உள்ளது. பெண் மட்டுமே பெரும்பாலான வீடுகளில் அலுவலகமும் வீடுமாக போராடிக் கொண்டிருக்கிறாள். ஆணும் பெண்ணும் இணைந்தே வீட்டில் உழைக்க மறுக்கும் நிலையில், சுகாதாரமற்ற உணவுகளை கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு சாப்பிடகொடுக்கும் நிலை. அதனால் சிறு வயதிலிருந்தே நோய் எதிர்ப்புதிறன் குறைந்து வருகிறது.

பெண்ணை உயர்த்த, குழந்தைகளை நோய்களிலிருந்து காப்பாற்ற சற்று ஆண் என்னும் பதவியிலிருந்து இறங்கி வருவோம். சேர்ந்து உழைப்போம். பெண்ணின் பாரம் குறைப்போம். வீட்டில் பெண்ணுக்கு மமதை கொடுப்போம். குழந்தைகளுக்கு பெண்களின் அருமைகளைச் சொல்லிக் கொடுப்போம். அதுவே பக்கத்து வீடு, அதற்கு அடுத்த வீடு அடுத்த தெரு, அடுத்த ஊர் என்று பரவி பெண்ணின் உயர்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

மூன்றாவதாய், மனிதத்துடன் இருக்கிறோமா...

நம்மை சுற்றியிருக்கும் இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். நம் கண்முன் நேரும் சிறு துன்பங்களின் துயர் துடைப்போம்.
சென்னையை அலசிவிட்டு வடிந்த வெள்ளம் நம் மனிதத்தின் ஒரு சான்று. இன்னும் மனிதம் இருக்கிறது என்பதற்கான பசுமை அறிகுறி. அதன் பிறகு நாம் என்ன செய்தோம். அவரவர் வீடுகளுக்குள் பழையபடியும் அடைந்துக்கொண்டோம். வெளி வருவோம். இன்னும் மனிதம் போற்றுவோம்.

என்ன விதைக்கிறோமோ அதுவே விருட்சமாகும். நல்லவைகளையே விதைப்போம். அவற்றையே அறுவடை செய்வோம். எதிர்கால சந்ததியினருக்காக கொடுப்போம்.  

வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்




Comments

  1. சிந்திக்க வேண்டிய கருத்துகள்...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...