Skip to main content

ஜெய்வர்மம் அறக்கட்டளை விருது - Queen of Poets

விருது 





கோவை ஜெய்வர்மம் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கான விருதுகள் பிப்ரவரி 15, 2015 அன்று கோவை திவ்யோதையா அரங்கில் வழங்கப்பட்டன. 







அந்த அறக்கட்டளையின் தலைவர் திரு டிராகன் ஜெய்ராஜ் அவர்களின் இரண்டு நூல்களும் அன்று வெளியிடப்பட்டன. சரித்திர கதைகள் எழுதுவதில் வல்லவரான ஜெய்ராஜ் அவர்கள் வர்மக் கலை ஆசானும் கூட. 







அவரின் வர்மக்கலையின் கர்ப்பிணி அடங்கல் என்னும் நூல், பெண்களுக்கானது. அதை நான் வெளியிட, திவ்ய சீலன் என்பவர் பெற்றுக் கொண்டார். 




கவிதைகளில் சிறப்பாய் செய்து வருவதால், எனக்கு Queen of Poets என்னும் விருது திரு பெ சிதம்பரநாதன், ஓம் சக்தி இதழின் பொறுப்பாசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது. 




நூலைப் பற்றிய அறிமுகமும் பரிசுக்கான என் ஏற்புரையும்






என் ஏற்புரை 

என் இனிய மாலை வணக்கம்.

என்னை குறித்த நண்பர் ஜெயராஜ் அவர்களின் அறிமுகத்திற்கு நன்றி. எனக்கு கிடைத்துள்ள இந்த விருதுக்காக ஜெய்வர்மம் அறக்கட்டளைக்கும் நண்பர் திரு டிராகன் ஜெய்ராஜ் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஜெய்வர்மம் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு துறையை சார்ந்தவர்களை கெளரவிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. விருதை பெறும் போது நாமும் இந்த சமூகத்துக்கு உயர்வாய் ஒன்றை கொடுத்திருக்கிறோம் என்கிற எண்ணமும் அதை தொடர்ந்து செய்யும் ஊக்கமும் மனதில் பிறக்கிறது. மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய நண்பரும் இந்த அறக்கட்டளையின் தலைவருமான ஜெய்ராஜ் அவர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
வர்மக்கலை சம்பந்தமான அவருடைய நூல்களை எனக்கு அனுப்பியிருந்தார். படித்துப் பார்த்தேன்.  இதற்கு முன் வர்மக்கலைப் பற்றி ஒரு பயம் இருந்தது. மர்மமான ஒன்று என்பதான எண்ண்ம். அதை பற்றிய தெளிவான சிந்தனை இல்லாதது 

அவரின் நூல்களை படித்தப்பின் தான் தெரிந்தது, அந்த கலை எவ்வளவு பழமை வாய்ந்தது, அதை வைத்து நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தலாம் என்பது.

அந்த வர்மக்கலையை அடிப்படையாய் கொண்டு அவர் நாவல்களும் எழுதியுள்ளார். அனைத்தும் சரித்திர நாவல்கள். அதில் அவரின் எழுத்து திறமையும் கண்டு வியந்தேன். தோய்வில்லா எழுத்து நடை, கதையின் நாயகனின் மூலமாய் வர்மத்தின் சில பல உத்திகளையும் சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.

இன்று வெளியிடப்பட்ட கர்ப்பிணி அடங்கல் நூலை பற்றியும் கூற விழைகிறேன். இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில் குழந்தை பேறு என்பது பிரசவம் என்பது  பெரும்பாலும் சிசேரியன் தான் என்று முடிவு செய்யப்படுகிறது. காரணங்கள் பல. இன்ன தேதி இன்ன நேரம் என முடிவு செய்யும் மூடநம்பிக்கைகள் ஒரு பக்கம். சரியான உடல் உழைப்பு இல்லாமை மறு பக்கம். பழைய காலம் போல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய நேரமும் இல்லை. மனதும் இருப்பதில்லை. உடல் உழைப்பு குறையும் போது சுகப்பிரசவதிற்கான வாய்ப்பும் குறைந்து போகிறது.

அப்படிப்பட்ட நிலையில் வேறு வழிகளில் மிதமான உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் சுக பிரசவம் கொண்டு வரமுடியும். இந்த நூலில் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகளை வர்மத்தின் மூலம் பெறுவது எப்படி என்பது இந்நூலில் ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார். 

அவரிடம் நான் கேட்ட கேள்வி ஒன்றுதான். இந்த வழிமுறைகளை வர்மகலையில்  தேர்ந்த ஆசானிடம் போய்தான் செய்ய வேண்டுமா என்பதே.  பெண்கள் தாங்களே செய்யக்கூடிய எளிய பயிற்சி முறைகள்தான் இவைன்னு சொன்னார். 

இது தவிர்த்து, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரக்கூடிய தலைவலி, வயிற்று வலி, சோர்வு, இரத்த சோகை போன்ற எல்லாவற்றிற்கும் வர்மக்கலை பயிற்சிகளை இந்த நூலில் எழுதியிருப்பதாக சொன்னார். 

எனக்கும் இதையெல்லாம் கேட்டவுடன் அந்த நூலை வாங்கி படிக்கும் ஆர்வமும் வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். பெண்களுக்கு பயனுள்ள நூல்தான் இது. 

இந்த சபையில் நான் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புத்தகம் படித்தல் என்னும் விஷயத்தை ப்ரோமொடே பண்றோம். என்பது நான் எல்லோருக்கும் சொல்ல விரும்பும் ஒரு விஷயம். நான் ஒரு கவிஞர் என்பதால் மட்டுமல்ல.எனக்கு மிகவும் விருப்பமான ஓன்று.,  

நானும் இன்னும் ஒரு தோழியும் சேர்ந்து பெண்களுக்கான வாசகர் வட்டம், முல்லை வாசகர் வட்டம் ஒன்றை தொடங்கியுள்ளோம். வார இதழ் மாத இதழ் தவிர்த்து வேறு எந்த புத்தகங்களையும் படிப்பதில்லை என்னும் குறை இருக்கிறது. செயல்ப்படுத்தி வருகிறோம். அதிலும் வர்மக்கலை பற்றிய நூல்களை பெண்களுக்கு படிக்க அறிமுகப்படுத்தியுள்ளேன். . 

இந்த மாதிரி ஒரு சில நல்ல விஷயங்களை செய்வதற்கு மொழியோடான எனது தொடர்பு  மேலும் வலு பெறுவதற்கும் இந்த விருது வந்து ஒரு ஊக்க சக்தியாய் இருக்கும் என்பதில் மகிழச்சியே. எனக்கு விருது வழங்கி கௌரவித்தமைக்கு நண்பர் டிராகன் ஜெய்ராஜ் அவர்களுக்கு என்  மனமார்ந்த நன்றியை மீண்டும்  தெரிவித்துக் கொள்கிறேன். 

நன்றி வணக்கம் 







Comments

  1. மிகவும் மகிழ்ச்சி சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. நல்ல கவிதைகள் பலவற்றை எழுதி, விருதும் பெற்ற உங்களின் ஏற்புரையை இந்தப்பதிவில் வெளியிடலாமே சகோதரி? வெளியிட வேண்டுகிறேன். நன்றி, பாராட்டுகள். வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்கிறேன் தோழா

      Delete
    2. என் ஏற்புரையை எழுதியிருக்கிறேன். நன்றி உங்களின் ஆர்வத்திற்கு..

      Delete
  3. பெ.சிதம்பரநாதன் அவர்கள் முதுபெரும் வானம்பாடிக் கவிஞர்களில் முக்கியமானவர். தங்களுக்கான விருதின் பெயரைத் தமிழில் தந்திருக்கலாம். அடுத்த முறையாவது அதுபற்றி யோசிக்கட்டும். நீங்களும் இதுபற்றி அவர்களிடம் பேசலாமே?

    ReplyDelete
    Replies
    1. பெ சிதம்பரநாதன் அய்யா அவர்களின் பேச்சும் அற்புதமாய் இருந்தது அன்று.
      விருதின் மொழி குறித்து நானும் சற்று யோசித்தேன். ஆனால் அந்த அறக்கட்டளையின் விருதுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே அமைத்திருக்கிறார்கள். இதை அவர்கள் வருடமாய் செய்து வருகிறார்கள். அதனால் நான் அது குறித்து அவர்களிடம் பேசவில்லை..

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...