Skip to main content

எங்க உடம்பை பற்றி எங்களுக்குதானே தெரியும்...

டாக்டர்ஸ் ஒன்லி...


நம்ம ஊருல இருக்கிற டாக்டர்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லணும். அவங்களை ரெண்டு வகையா பிரிக்கலாம். 

ஒண்ணு, 
மெத்த படித்தவர்கள்...MBBS, MD,MDDM,MCh, FRCS....இப்படி அடுக்கிகிட்டே போயிருப்பாங்க...
இவங்க எல்லாம் நமக்கு பெரிய நோயா வந்தா மட்டுமே கவனமா பார்ப்பாங்க. சாதாரணமா முதுகு வலின்னு போனா அசால்ட்டா பார்த்துவிட்டுருவாங்க...
பெரும்பாலும் இன்டெர்ஆக்டிவா இருக்க மாட்டாங்க...

ரெண்டாவது, 
வெறும் MBBS மட்டும் படிச்சிருப்பாங்க...ஆனா, அவங்க specialize பண்ணாத துறையில் கூட நம்ம உடம்புக்கு தக்க மருந்து கொடுப்பாங்க. முடியலைனா, வேற டாக்டர் கிட்டே refer பண்ணுவாங்க...இவங்கள மாதிரிபட்ட டாக்டர்சை நாம துணிஞ்சு பாமிலி டாக்டரா வச்சிக்கலாம்...

ஏன் இதெல்லாம் சொல்றேன்னு சந்தேகம் வரும் உங்களுக்கு...என் பிரச்னையும் பற்றி சொன்னாதான் உங்களுக்கு புரியும். 


ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு ஜெனரல் செக்அப்புக்காக ஒரு துறை சார்ந்த மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். வால் மாதிரி பட்டங்களை பின்னால் வைத்திருந்தார். நிறைய வருட அனுபவம் உள்ளவர் என்று என் தோழியின் recommendation னாலே போனேன். டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தார். அது ஓகேதான்..

இந்த prescription எழுத வரும்போது, எனக்கு இதுக்கு முன் என்ன பிரச்னை இருந்ததுன்னு சொன்னேன். என்ன பெருசா இருக்க போகுது...அல்சர்தாங்க...Oh ன்னு சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார்.

நானும் மூணு நாளா எடுத்துக்கிட்டேன். சிறிது சிறிதாய் abdominal pain, naausea என்று ஆரம்பித்து, நேற்று ஒரு uneasiness, discomfort லெவலுக்கு என்னை கொண்டுப்போய்விட்டது. பக்கத்தில் இருக்கும் மருத்துவர் ஒருவரிடம் காண்பித்ததில், அந்த மாத்திரையை நிப்பாட்ட சொல்லிவிட்டார். ட்ரீட்மென்ட் கொடுத்து அதை சரி செய்ய வேறு மாத்திரைகள் கொடுத்தார்.



இதில் எனக்கு வீண் செலவு வேறு. இனி நான் ரெகவர் ஆக ரெண்டு நாள் ஆகும்.

இன்று மறுபடியும் போன் பண்ணி, டாக்டர் எனக்கு இப்படி இப்படி என்று சொல்லிய பிறகும், ‘இப்படி ஆக சான்சே இல்லையே..நீங்க நேரில் வாங்க செக்அப் பண்ணிக்குவோம்...’ என்கிறார். எதுக்கு இன்னும் ஒரு 500 ரூபாய் கான்சல்டேஷன் பீஸுக்காகவா?...


டாக்டர்ங்க கிட்டே ரெண்டு விஷயம் சொல்ல விரும்புறேன்.

நாங்களும் உங்க கிட்டே வரதுக்கு முன்னாடி நெட்ல கொஞ்சம் படிப்போம்தான். உங்க கிட்டே வந்து அதை நாங்க சொன்னா, அதை நோய் பற்றிய எங்க பயமா எடுத்துகுங்க. ‘ரொம்ப அறிவாளி மாதிரி பேசுறாங்க’ ன்னு மனசுக்குள்ளே எங்களைத் திட்டாதீங்க. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காதுன்னு சொல்லி புரிய வைங்க.   

அல்சர் இருக்குன்னு சொன்னா, கொஞ்சம் யோசிங்க. உங்களுக்கு மருந்து எழுதி எவ்வளவு அனுபவம் இருக்குமோ, அதே போல எங்களுக்கும் மாத்திரை சாப்பிட்டு சாப்பிட்டு நிறைய அனுபவம் இருக்கும். எங்க உடம்பை பற்றி எங்களுக்குதானே தெரியும்...

இனியாவது, எங்க கஷ்டத்திற்கு காது கொடுப்பீங்கன்னு நம்புறேன்...

கரெக்ட்தானே நான் சொல்வது...






Comments

  1. இந்த டாக்டருங்களை நினைச்சா ,அல்சர் கூடத்தான் செய்யும் போலிருக்கே !

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ உண்மைதான்..

      Delete
  2. காது கொடுப்பதா...? காசு கொடுத்தால் போதும்...!

    ReplyDelete
    Replies
    1. பீஸ் மட்டும் ஏறிகிட்டே இருக்கு. நம்ம உடல்நிலை மோசமாகிகிட்டே இருக்கு...என்ன செய்வது?

      Delete
  3. வர வர டாக்டர்னாலே பயம் வந்துருது! டாக்டர்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான்...இன்னும் என்னால் சாப்பிட முடியவில்லை...

      Delete
  4. நூற்றுக்கு நூறு வீதம் உண்மை வைத்தியர்களின் கவனக் குறைவான
    செற்பாட்டால் எத்தனை எத்தனை இழப்புகளை நாங்கள் சந்தித்து
    வருகிறோம் இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் மருத்துவத்
    துறை மீதி நம்பிக்கை அற்றுப் போய் அச்சம் தான் உச்சம் தலையில்
    நிக்குறது .சில இடங்களில் எங்களை வைத்தே நல்லாப் பழகுகிறார்கள்
    என்பதை மட்டும் மறுக்கவே முடியாது .சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள்
    தோழி நோயற்ற வாழ்வு வாழ இவ் வையகத்தில் .

    ReplyDelete
    Replies
    1. உண்மையே நீங்கள் சொல்வது. நன்றி தோழி...

      Delete
  5. ///என் தோழியின் recommendation னாலே போனேன்////

    முதலில் உங்கள் தோழியை பார்த்து தலையில் வலிக்கிற மாதிரி கொட்டுங்க தவறான recommendation

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...அதை செய்துவிட்டேன்...

      Delete

  6. //நிறைய வருட அனுபவம் உள்ளவர்///

    நிறைய அனுபவம் உள்ள டாக்டர் உடனே நோயை குணப்படுத்த மருந்து தரமாட்டார். அப்படி தந்து இருந்தால் வால் மாதிரி பட்டங்களை பெற அவர் செலவழித்த பணத்தை எப்படி திரும்பி எடுப்பதாம்..

    ReplyDelete
    Replies
    1. நம்மளை வச்சிதானே பிழைப்பே நடக்குது...

      Delete
  7. மதுரைத் தமிழன் சொன்னது சரிதான். அதிகம் படிக்க அதிகம் செலவிட்ட டாக்டர்கள் கன்சல்டேஷன் பீஸ் தொடங்கி எல்லா டெஸ்ட்டுகளையும் வைத்து காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். எல்லா டெஸ்ட்டும் எடுத்தபின் நார்மல் தாங்க ன்னு சொல்லி ரெண்டு மாத்திரை குடுக்கறதோட சரி. டாக்டர்களிடம் உங்கள் சொ(நொ)ந்த அனுபவங்கள் ஏறக்குறைய பலருக்கும் பொருந்திவரக் கூடியவைதான்.

    ReplyDelete
    Replies
    1. இனி அடுத்த முறை டாக்டர் பார்க்க செல்லும் முன் கவனமாக இருப்போம் அல்லவா...நன்றி கணேஷ்...

      Delete

    2. அந்த டாக்டரின் பெயரையும் வெளியிட்டு இருந்தால் பலரும் பலன் அடைவார்கள் அல்லவா.. பெயர் சொன்னால் லீகல் பிரச்சனை என்றால் சூசகமாக அல்லது க்ளு வைத்து சொல்லாம் அல்லவா

      Delete
  8. கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல போயிட்டா பிரச்சனை இல்லியோ?

    ReplyDelete
    Replies
    1. பிரைவேட் ஆஸ்பிட்டலில் பணம் பிடுங்கி பார்க்கவாவது செய்வார்கள். அங்கு பணம் பிடுங்கினாலும் பார்க்கமாட்டார்கள்...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...