Skip to main content

கலங்கரை...




ஆக்கிரமிக்க தொடங்கியது அலை  
கரையின் காலடித் தடங்களை...

மணல் விட்டு நகரத் தொடங்கிய
அந்த தேகத்தைக் களவாடி
உள்ளிழுத்துச் சென்று
அசையா நீரில் பாய்மரமாக்கிவிட்டு
காற்றின் வசீகரத்திற்கு ஆட்பட்டு
காணாமல் போய்விட்டது அலை..

நீரின் சலனமாய் வந்த
சுழலின் சுவாசம்  
தேகத்தின் வாசனை நுகர்ந்து
ஆழியின் உள்நோக்கி
இழுத்துச் சென்றது...

 மௌனம் மட்டுமே சுமந்து
இறுகியிருந்த இதயமோ
அடிநோக்கி பயணிக்க மறுத்து    
நீரின் மேல் தொட்டும் விரையும்
காற்றின் விரல் பிடித்து
கடலினுயர்ந்த
அடர்ந்த தீவுக்குள் நுழைந்தது...

சருகுகளின் பரப்பின் மீதும்
கிளைகளின் ஊடாகவும்
இழுத்துச் சென்றக் காற்றை
சற்றேனும் நிறுத்தாமல்
இயைந்து துவண்டது...

உரசலின் காயங்கள்
இறுக்கம் சூழ்ந்த அந்த இதயத்தின்  
மௌனத்தை உதறவைத்து   
வலியின் வார்த்தைகளைக்   
காற்றுவெளி எங்கும் பரப்ப
மகிழ்வாய் ஒடுங்கியது அது
மீண்டும் தேகத்தின் கணப்புக்குள்...

அசையும் நீரின் மட்டம் தொட்டு
அலையின் சுருளில்
மறுபடியும் கரை கண்டது
தேகம்...

Comments

  1. அழகான அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. பொதுவாய் தேகம் கரையிலிருக்க மனம் மட்டும் அலைகளினூடே ஆழ்கடல் சென்று மீளும். இங்கே அலைகளினால் அலைக்கழிக்கப்படும் ஒரு தேகம் இறுதியில் கரைசேர்ந்துவிடுவது அருமை. வார்த்தைகள் வசப்படுகின்றன உங்களுக்கு. பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. தேகம் ஆழ்கடலினுள்ளும் மனம் நீர்பரப்பின் மீதும் பயணித்து தனக்குரிய அமைதியைத் தேடுவது என்பது நீங்கள் கூறியதுபோல் சற்று வித்தியாசமே..நன்றி உங்களின் ரசிப்புக்கு...

      Delete
  3. வணக்கம்
    மனதை நெருடிய அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்...

      Delete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...