Skip to main content

சித்திரமாய்...




அமிலத்தைக் கொண்டு 
பெண்மையைச் சிதைக்க 
அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... 

அதை விற்க தடை கோரி 
ஏழு வருடமாய் தவமிருக்கிறது
இன்னொரு கூட்டம்... 

சட்டம் இயற்றச் சொல்லி 
பதினோரு வாரமாய் காத்திருக்கிறது 
வழக்காடு மன்றம்... 

தண்ணீர் விடுத்து 
அமிலம் கொண்டு 
தூங்கும் அதிகாரத்தை எழுப்பினால்,
ஒருவேளை 
சிதிலமான பெண்மையின் முகம் சித்திரமாகுமோ?....

Comments

  1. //அமிலத்தைக் கொண்டு
    பெண்மையைச் சிதைக்க
    அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... ///

    அலைந்துக் கொண்டிருக்கிற கூட்டம் மிருக கூட்டம். அதை காப்பாற்ற முயற்சிக்குது திருட்டு கூட்டம்..


    பெண்வதையை விட மிருகவதையை பாதுகாக்க நாட்டில் சட்டம் இயற்றுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பா...இன்று காலை ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியே இதுதான்...

      Delete
  2. பெண்ணிற்கும் மனம் உண்டு. அவளுக்கும் சொந்த ஆசாபாசங்கள் உண்டு, அவள் எவருக்கும் கைப்பாவை அல்ல என்பதை உணர்ந்து கொள்ளும் நாளில் தான் இத்தகைய கொடுமைகள் தீரும்.

    ReplyDelete
    Replies
    1. பெண்களை என்றுமே மீடியாவில் தவறாகதானே காட்டுகிறார்கள். அதை பார்க்கும் ஆண்களுக்கு காதலும் அதையடுத்து தோல்வியின் மீது கோபமும் இப்படிப்பட்ட விபரீதங்களும் நடக்கத்தானே செய்யும்....

      Delete
  3. அருமையான கேள்வியுடன் முடிகிறது அமிலக் கவிதை...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்...

      Delete
  4. தூங்கிட்டு இருக்கிற சட்டத்தை தண்ணி தெளிச்சு எழுப்ப சொல்ரீங்க...தூங்குர‌மாதிரி நடிக்கிற சட்டம்?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கலாகுமரன்...தூங்குவதாய் நடிக்கும் அரசை நம்மால் என்ன செய்ய முடியும்?

      Delete
  5. .. தண்ணீர் விடுத்து
    அமிலம் கொண்டு
    தூங்கும் அதிகாரத்தை எழுப்பினால்,
    ஒருவேளை
    சிதிலமான பெண்மையின் முகம் சித்திரமாகுமோ?.... ..

    நல்ல சாட்டையடியான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சங்கவி....

      Delete
  6. அருமையான கேள்வி பதில் தான்?????

    ReplyDelete
    Replies
    1. யாருக்குத் தெரியும்...

      Delete
  7. உருக்கமா கவிதை எழுதி எல்லாம் இந்த மிருகங்களை திருத்தவோ, இந்ஹ்டப் பிரச்சினையை சரி செய்யவோ முடியாது.

    இதுபோல் தவறு செய்றவங்களை நடு ரோட்டில் தூக்கில் போடணும்! இல்லைனா நடுத்தெருல சுட்டுக் கொல்லணும்!

    ஜெயலலிதா போன்ற பெண்கள் ஆளும்போது தமிழ்நாட்டில் அது போல் சட்டம் கொண்டு வரணும்.

    நம்ம எதுல முன்னேறி இருக்கோம்? எதில் நம்ம முதன்மையாக இருக்கிறோம்? னு பார்த்தால் இது போல் மிருகத்தனமாக பெண்கள் மேலே அமிலத்தை ஊத்தும் செய்லகளில் உலகத்திலேயே முன்னிலையில் இருக்கோம்!! நமக்கு முன்னால யாரு இருக்கானு பார்த்தால் பங்லாதேஷ்!

    ReplyDelete
    Replies
    1. நிஜமே வருண்...
      அரசியல்வாதிகள் தங்களுக்கு எவையெல்லாம் சாதகமாக வேண்டும் அவற்றை மட்டுமே சட்டமாக்கி பழகி விட்டார்கள். மற்றவற்றை பற்றி துளியும் யோசிப்பதில்லை. பெண்களின் மேல் வைக்கப்படும் வஞ்சம் என்பது அமிலத்தின் வாயிலாக தான் இந்த சமுதாயத்தில் வீசப்படுகிறது....

      நன்றி...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...