பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
இலை இழுத்தோடும் ஓடையில்
ReplyDeleteநனைந்த பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் விரல்களின் வாசம்
sweet lines
நன்றி நண்பா...
Deleteஎன்னமோ போங்க... அருமையா இருக்கு சகோதரி...
ReplyDeleteம்ம்ம்...
Deleteஅடையாளமற்ற என்னின் அன்பு
ReplyDeleteவெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க
அவற்றின் இருட்டில் தொலையாதிருக்க
நிலவாய் உன்னை வேண்டி காத்திருக்கிறேன்...
காத்திருப்பு கண்ணீர் மயமானது..
நிஜம்தான் தோழி...
Deleteகாதலின் உணர்வுகளை நன்கு நுகர்ந்த நாயகியின் உணர்ச்சி குவியாலான வரிகள் ..அதில் வரிகளின் கோர்வை அபாரம்,படிக்கும் போது நாயகியின் எண்ணங்கள் நம் மனதில் ஒரு நிமிட சலனத்தை ஏற படுத்துகிறது என்றால் அது கவிதையின் வெற்றி..அருமை ..
ReplyDelete// அடையாளமற்ற என்னின் அன்பு
வெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க //
அன்பு இருக்கிறது ஆனால் வெளிப்படும் போது கோபமாகவோ ,அமைதியாகவோ ,பேசாத நினைவுகளாகவோ வேறு விதமாக வெளிபடுவதினால் உண்மை அன்பு அடையாளம் அற்றதாக மறைந்து நிற்கிறது தவிர மறைந்து போகவில்லை ..பாடல் எனபது ஒவ்வரு வரிக்கும் ஒவ்வரு அர்த்தம் பேச படவேண்டும் ..இந்த வரிகள் பேசுகின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை வாழ்த்துக்கள்.
ரசித்து உட்வாங்கி இருக்கிறீர்கள்...நன்றி ராஜன்...
Delete// என்னின் அன்பு //
ReplyDeleteஇது என்ன மேடம் புது வார்த்தையா இருக்கு :)
பழைய பழகிய வார்த்தைதான்...
Deleteகாத்திருக்கும் காற்றே உந்தன்
ReplyDeleteபூத்திருக்கும் புதுக்கவி கண்டேன்
வார்த்தையிலே கொட்டி விட்டாய்-அதனை
சேர்த்துவிட தூது செல்லவோ தோழி...!
இனிய கவிதை வாழ்த்துக்கள்
http://soumiyathesam.blogspot.com/