Skip to main content

பிரிதலின் நிமித்தம்....




உன் சிதறிய வார்த்தைகளினூடே   
மீளாது மாண்டு போகும் என் இதயம்... 

கைவிட்டு பிரியும் விரல்கள் 
காற்றை தொட்டு திரும்பும்...

இலை இழுத்தோடும் ஓடையில் 
நனைந்த பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் 
உன் விரல்களின் வாசம்
அவை விட்டு செல்லும் சில நீர்த்துளிகளை 
காயப்பட்ட கண்ணீரென கொள் அன்பே...

அடையாளமற்ற என்னின் அன்பு 
வெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க 
அவற்றின் இருட்டில் தொலையாதிருக்க 
நிலவாய் உன்னை வேண்டி காத்திருக்கிறேன்...  
   

Comments

  1. இலை இழுத்தோடும் ஓடையில்
    நனைந்த பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
    உன் விரல்களின் வாசம்

    sweet lines

    ReplyDelete
  2. என்னமோ போங்க... அருமையா இருக்கு சகோதரி...

    ReplyDelete
  3. அடையாளமற்ற என்னின் அன்பு
    வெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க
    அவற்றின் இருட்டில் தொலையாதிருக்க
    நிலவாய் உன்னை வேண்டி காத்திருக்கிறேன்...

    காத்திருப்பு கண்ணீர் மயமானது..

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் தோழி...

      Delete
  4. காதலின் உணர்வுகளை நன்கு நுகர்ந்த நாயகியின் உணர்ச்சி குவியாலான வரிகள் ..அதில் வரிகளின் கோர்வை அபாரம்,படிக்கும் போது நாயகியின் எண்ணங்கள் நம் மனதில் ஒரு நிமிட சலனத்தை ஏற படுத்துகிறது என்றால் அது கவிதையின் வெற்றி..அருமை ..

    // அடையாளமற்ற என்னின் அன்பு
    வெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க //

    அன்பு இருக்கிறது ஆனால் வெளிப்படும் போது கோபமாகவோ ,அமைதியாகவோ ,பேசாத நினைவுகளாகவோ வேறு விதமாக வெளிபடுவதினால் உண்மை அன்பு அடையாளம் அற்றதாக மறைந்து நிற்கிறது தவிர மறைந்து போகவில்லை ..பாடல் எனபது ஒவ்வரு வரிக்கும் ஒவ்வரு அர்த்தம் பேச படவேண்டும் ..இந்த வரிகள் பேசுகின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து உட்வாங்கி இருக்கிறீர்கள்...நன்றி ராஜன்...

      Delete
  5. // என்னின் அன்பு //

    இது என்ன மேடம் புது வார்த்தையா இருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. பழைய பழகிய வார்த்தைதான்...

      Delete
  6. காத்திருக்கும் காற்றே உந்தன்
    பூத்திருக்கும் புதுக்கவி கண்டேன்
    வார்த்தையிலே கொட்டி விட்டாய்-அதனை
    சேர்த்துவிட தூது செல்லவோ தோழி...!

    இனிய கவிதை வாழ்த்துக்கள்
    http://soumiyathesam.blogspot.com/

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...