Skip to main content

பூச்சாண்டி.....



சோறு ஊட்டும் போதும், தூங்க செய்யும் போதும்
ஒரு தாய் தன் குழந்தைக்கு பூச்சாண்டியை வைத்து
படமும் பயமும் காட்டுவாள்...



சாப்பிடும் போது பூச்சாண்டியை நினைக்கும் ஒரு குழந்தை
தான் பலசாலியாகி அந்த பூச்சாண்டியை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற  தைரியம் பெறும்...



தூங்கும் போது அவனை நினைக்கும் ஒரு குழந்தை
யாரையும் ஏற்றுக் கொள்ளவோ எதிர்க்கவோ தைரியமற்று
தன் அன்பில் இருப்பவர்களையே காயப்படுத்திப் பார்க்கும்...



இவை அனைத்தும் பூச்சாண்டியை அறிமுகப்படுத்தும்
அந்த தாயிடம் தான் இருக்கிறது...



அவளின் அந்த செயல் தவறில்லை - ஆனால்
அதை போராடி வெற்றி கொள்ளும் தன்மை அல்லது 
அதை பார்த்து பயந்து ஒளிந்து கொள்ளும் தன்மை
இரண்டில் எதை அவள் கற்று தருகிறாள் தன் குழந்தைக்கு  
என்பதில் தான் அக்குழந்தையின் வாழ்வின் சூட்சமமே அடங்குகிறது....



ஆறடி உயர்ந்த மனிதனாய் வளர்ந்து 
நாலு பேரை அடித்துவிட்டால் அவனை தான் 
தைரியமாய் வளர்த்திருக்கிறோம் என்று 
பெற்றோர் பெருமை கொள்ள முடியாது....
பிரச்சனைகளை மனதளவில் சந்திக்கும் தைரியம் இழந்தவன் தான் 
அதை உடலளவில் எதிர்க் கொள்கிறான்...... 



அந்த குழந்தையின் சிந்தனையில்
தெளிவாய் சிந்திக்கும் அறிவையும் 
தைரியமாயும் யோசனையாகவும் 
அடுத்தவர்களை காயப்படுத்தாமலும் 
நடந்துக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் 
கொடுத்தால்தான் அவர்கள் தன் குழந்தையை 
நல்ல முறையில் வளர்த்ததாக அர்த்தம்....



வளர்ப்பு முறையில் தவறு செய்யாதீர்கள் 
நாளை அக்குழந்தையால் சமூகமோ அல்லது 
யாராவது ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால் கூட 
அந்த தவறு பெற்றோரையே சேரும்....



அடுத்த முறை யாராவது பூச்சாண்டியை கைக் காட்டினால் 
தெளிவுபடுத்துங்கள் அவர்களுக்கு
பூச்சாண்டிதான் சமூகத்தின் காவல்காரன் என்று.... 



Comments

  1. ///வளர்ப்பு முறையில் தவறு செய்யாதீர்கள்
    நாளை அக்குழந்தையால் சமூகமோ அல்லது
    யாராவது ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால் கூட
    அந்த தவறு பெற்றோரையே சேரும்....////


    உண்மை மிக மிக உண்மை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  2. பூச்சாண்டி...இது புதுசா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. பூச்சாண்டி பழைய அதே ஆள்தான்....கருத்து மட்டுமே புதுசு...நன்றி ஜீவா...

      Delete
  3. சூசகமாய்
    சூழ்நிலையை சமாளிக்கும்
    பொழுதுகளில்
    வாழ்வின்
    சூத்திரத்தையும்
    சூட்சுமமாய்
    உரையேற்ற வேண்டுமென
    மிக அழகாய்
    உரைக்கும் கவிதை...

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி வளர்க்கப்படுபவர்களால் நாம் சில கஷ்டங்களை அனுபவிக்கும் போதுதானே இந்த மாதிரி அனுபவ சொற்கள் தோன்றுகிறது...நன்றி மகேந்திரன்...

      Delete
  4. மிக அருமையான அறிவுரை, ஆலோசனை!

    ReplyDelete

  5. வணக்கம்!

    வேப்பமர உச்சியில் நின்னு
    பேயொன்னு ஆடுதுன்னு
    விளையாடப் போகும்போது
    சொல்லி வைப்பாங்க - உன்
    வீரத்தைக் கொழுந்திலேயே
    கிள்ளி வைப்பாங்க!

    வேலையற்ற வீணா்களின்
    மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட
    நம்பிவிடாதே! நீ
    வீட்டக்குள்ளே பயந்து கிடந்து
    வெம்பி விடாதே!

    பட்டுக் கோட்டை படைத்திட்ட
    பாட்டுக் குரையைப் பகன்றுள்ளீா்!
    கொட்டும் மழையில் நனைந்திட்ட
    குளிர்ச்சி நெஞ்சுள் கூடியது!
    கட்டுப் பாடும் கட்டளையும்
    கருத்தைச் சிதைக்கக் கூடாது!
    மொட்டு மனங்கள் முகிழ்த்தாட
    மொழிந்த வழியை வாழ்த்துகிறேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நிஜமான வரிகள் கவிஞரே...இன்று நான் இதை உணர்ந்தேன். அதுதான் இந்த கவிதையின் பிறப்பிடம்...

      Delete
  6. அருமையாகச் சொல்லி இருக்கிறிகள்.நல்ல வேளை என் தாய் எந்தப் பூச்சாண்டியையும் காட்டாமல் வளர்த்தார்கள்.
    இல்லாவிட்டால் பரம்பரையாக அந்த பயங்கரப் பூச்சாண்டி தொடர்ந்திருப்பார். உங்கள் பூச்சாண்டி இனி வலம் வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. பூச்சாண்டியை வேரோடு அழிக்கவும் முடியாது....இன்றும் நைட்டி மாட்டி கொண்டு சோறு ஊட்டும் பெண்கள் கூட அவனை விடுவதில்லை....நன்றி வல்லிசிம்ஹன்...

      Delete
  7. பூச்சாண்டிகள் இந்த சமூகத்தின் பொய்யுருதானே?அதை ஏன் நம் மனதில் விதைக்க வேண்டும்,பூச்சாண்டிகள் யார் என்பதை மிகச்சரியாக புரிந்து கொள்வோமானால் நம்மிடம் பயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. பூச்சாண்டி என்பது பொய் என்பது விவரம் தெரிந்த மனிதர்களுக்குதானே விமலன்....எளிதில் சோறு ஊட்டும் வேலையை முடிக்க உதவும் பூச்சாண்டி நடுத்தர தட்டு பெண்களை விட்டுவைப்பதில்லை...

      Delete
  8. நல்ல பதிவு, சரியாச் சொன்னீங்க. பூச்சாண்டி பயத்தால், உடலால் பலசாலிதான் உலகில் வல்லவன் என்கீற கருத்தையும் குழந்தைகள் மனதில் கொண்டுவிடுகிறார்கள். நடிக-நடிகையர்களைக் கண்டு புற அழகே உண்மை அழகு என்று நினைப்பதுபோல..!!

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் தாய் தான் இந்த தவறை செய்கிறாள். நன்றி தோழி...

      Delete
  9. அடுத்த முறை யாராவது பூச்சாண்டியை கைக் காட்டினால்
    தெளிவுபடுத்துங்கள் அவர்களுக்கு
    பூச்சாண்டிதான் சமூகத்தின் காவல்காரன் என்று....

    குழந்தைகள் மனதில் வீரத்தை விதைக்கவேண்டும் ..

    ReplyDelete
    Replies
    1. பெரியவர்கள் ஆனபிறகும் எத்தனை பேர் பயத்தோடு வாழ்கிறார்கள். மனைவியை இருட்டுக்கு துணைக்கு அழைத்து செல்லும் ஆண்களை பார்த்திருக்கிறேன் ராஜேஸ்வரி....

      Delete
  10. //பிரச்சனைகளை மனதளவில் சந்திக்கும் தைரியம் இழந்தவன் தான்
    அதை உடலளவில் எதிர்க் கொள்கிறான்...... //
    மிகவும் ரசித்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தானே மேம்....

      Delete
  11. தெளிவாகச் சிந்திக்கும் அறிவையும் மனத்தைரியத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அருமையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete
  12. யதார்த்தமான உண்மை எழுத்துக்கள் !நன்றி சகோதரி !

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...