Skip to main content

மனம் போன போக்கிலே....




கால் போன பாதையில்
மனதின் சுமைகள் குறைய   
எதிலும் லயிக்காமல்
மாலை நேரத்து நடை....
சுண்டக்காமுத்தூர் வளைவு நெருங்கும் போதுதான்
நடையின் தூரம் உறுத்தியது....

திரும்பி நடக்கும் போது
கண்ணாடி சட்டம் போடும் கடை
கண்ணில் பட்டது.....

கண்ணாடி ஓவியம் கொடுத்து நாளாகிறது
கேட்டால் தேடிக் கொண்டேயிருக்கிறான்
மறந்து வைத்த இடத்தை....

அரை மணி நேரம் கழித்து
எடுத்து வந்தான் என் ஏசுநாதரை
நான் எடுத்து செல்கிறேன் என்ற போது
சட்டம் போட்டு காலையில் தருகிறேன்
என்று வைத்து கொண்டான்...

கண்ணாடியில் ஏசுநாதர் சிலுவையில் தலை குனிந்து
முற்கள் குத்திய இடங்களில் இருந்து குருதி
நமக்காக பாவசுமையை தாங்கியதாய் வரலாறு...

வரும்வழி முழுவதும்
நாம் என்ன பாவம் செய்தோம்
என்கிற மனக்கணக்கு....     
இப்போது அவர் இல்லை
நம் பாவம் சுமக்க
நம் பாவம் நமக்குதான்
என்ற கவலை...

இருட்டி வீடு வந்தால்
வீட்டு வாசலில் தோழியர் இருவர்
சம்பிரதாயத்திற்கு சிரிக்க ஆரம்பித்து
சந்தோஷமாய் முடித்து
அவர்கள் விடைபெற்ற போது
மனம் லேசாகி இருந்தது.....

மனம் என்று ஓன்று குரங்காய்    
இரண்டு பக்கமும் உஞ்சலாடிக் கொண்டு
நம்மையும் உஞ்சலாட்டிக் கொண்டு...

காயப்படுத்தி கட்டும் போட்டுவிடும்
அதன் போக்கிலேயே நானும்....

Comments

  1. மனம் என்று ஓன்று குரங்காய்
    இரண்டு பக்கமும் உஞ்சலாடிக் கொண்டு
    நம்மையும் உஞ்சலாட்டிக் கொண்டு...
    மனதின் இயல்பு அதுதானே?

    ReplyDelete
  2. உங்கள் வாழ்வில் நிற்பது நடப்பது சிந்திப்பது உணர்வது எல்லாம் கவிதையாகி வந்து கொட்டிக் கொண்டே இருக்கிறது அதுவே காவியம் ஆகினாலும் ஆச்சிரியப்படுவதில்லை

    ReplyDelete
    Replies
    1. நம் அனுபவங்கள் அனைத்துமே அடுத்தவர்களுக்கும் சில நேரங்களில் பயன்படுமே...

      Delete
  3. எப்படி தோழி மூச்சு விடும் இடைவெளியை கூட எழுத்தில் வெளியிட முடிகிறது ...........அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....சரளா உங்களால் முடியாததா, தெரியாததா....

      Delete
  4. மனக்குரங்கு செய்யும் பிடிவாதம் கவிதையாயிருக்கிறது ..அருமை ..!

    ReplyDelete
  5. ஒரு கதை சொல்வர் ,ஒரு அறையில் குரங்கு நுழைந்து இருக்கிற சாதனங்களை குழப்பும் போது அதை விரட்ட நினைத்து துரத்தும் போது அது மேலும் சில பாதிப்புகளை உண்டு பண்ணிவிடும் ஆனால் அமைதியாக இருந்தால் அது அங்கேயும் இங்கேயும் ஆட்டம் போட்டாலும் கடைசியில் தனக்கு தேவையானதை எடுத்து விட்டு அமைதியாக போய்விடும் என்று ...
    அதை மனத்தினோடு ஒப்பிடும் போது மனது கலவர படும் போது அதையும் இதையும் நினைக்க நினைக்க மேலும் கவலைகள் தான் உருவாகும் ..அமைதியாக இருக்கும் போது அது என்ன செய்யும் ஒன்று துக்கத்தையோ இல்லை அதன் முடிவில் சந்தோசதையோ கொடுத்து விட்டு அமைதியாக இருக்கும் என்பர்

    அதுபோல் இந்த கவிதை பல நினைவுகள் வருத்தினாலும் ,துக்கத்தை சுமக்க அந்த சிலுவை நாயகன் கூட இல்லை என்று ஆதங்க பட்டாலும் முடிவில் அந்த மனம் துக்கத்தை மனதில் இருந்தது எடுத்து விட்டு செல்லும் போது சந்தோசங்கள் மிச்சமாய் வாழ்கையின் பரந்து விரிந்த பாதையில் நடை போட செய்கிறது ..

    இந்த கவிதை முடிவில் ஒரு moral Story போல இருந்ததால் நானும் ஒரு சிறிய கதை சொல்லிவிட்டேன் .

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...