Skip to main content

காது குத்தல்....



சிவப்பும் மஞ்சளும் பச்சையுமான பட்டில்
தலை நிறைய பூவோடு
பெரிய குங்கும பொட்டோடு
பெண்களும்.....

வெள்ளை பூ வேட்டியுமாக
சின்ன கீற்றாய் விபூதியுமாக
ஆண்களும்.....

பெரிய கண்களோடு குலசாமியும்
மீசை முறுக்கோடு பூசாரியும்
எலுமிச்சை தலையோடு அரிவாளும்
எல்லாமே பக்தி முத்திப் போய் இருக்க

ஆடு மட்டும்
மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப்போல
தலை குனிந்து கண் நிறைய பயத்தோடு....


வாயில்லா ஜீவனை வெட்டி
சாமிக்கு படையலிட்டு
அவரின் பெயரால்
இவர்கள் சாப்பிட்டு
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று
ஜீவகாருண்யத்துடன் வள்ளலாரையும்
சேர்த்து புதைத்து
சந்தோஷமாய் காது குத்தி திரும்புவார்கள்
இந்த புண்ணியவான்கள்......



Comments

  1. உங்களுக்கு ஐந்தறிவு ஜீவன்கள் மேலுள்ள பாசம் புரிந்து கொள்ள முடிகின்றது சகோதரியே தாவரங்களும் சுவாசிகின்றனவே அதன் இல்லை தழை காய் கனிகளை கொய்து மனிதன் பசி தேவைகளைபூர்த்தி செய்து கொள்கின்றானே அது கூட பாவம் தானே அதற்கு வள்ளலார் மட்டும் என்ன விதி விலக்கா என்ன ?

    ReplyDelete
    Replies
    1. தாவரங்கள் நம் கண் பார்த்து அதன் அன்பை வெளிப்படுத்துவதில்லை....நாம் சற்று வாடினால் கூட நம் வீட்டு செல்ல நாயும் வாடிவிடுமே. அன்பை பகிரும் உயிர்களை கொல்வது பாவம் இல்லையா...

      Delete
  2. இதுவும் பண்பாடு கலாசாரம் ?

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்ல மாட்டேன். அடுத்த உயிர்களையும் தன் உயிர் போல் இவர்கள் நினைக்க வேண்டும். வலி போதுதானே கண்ணதாசன்...

      Delete
  3. இல்ல ஒரு வரி எனக்கு புரிய வில்லை
    //ஆடு மட்டும்
    மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப்போல
    தலை குனிந்து கண் நிறைய பயத்தோடு....//

    பெண்ணை போலவா இல்லை ஆணை போலவா ...
    கொஞ்சம் டவுட் அதுதான் கேட்டேன் ...

    ReplyDelete
  4. வள்ளலார் பத்தி சொல்லும்போதுதான் அவங்க செய்கிற சில விசங்களிலும் தெளிவு வேண்டும் வள்ளலாரை போல அவர் அவதார நோக்கம் பத்தி வாதம் செய்து கொண்டு இருந்தேன் ..பலர் என்னைவிட வயதில் பெரியவர்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடிந்த எனக்கு அதில் ஒரு சிறுவயது பையன் நீங்கள் முதலில் மாமிச உணவு உட் கொள்வீர்களா என்றார் ஆமாம் ..என்றேன் ..நீங்கள் ஆன்மிகம் பேசவே லாயக்கு இல்லை என்று என் ஒட்டு மொத்தமா அவுட் ஆகிட்டான் ...அதுமாதிரி உயிர் வதை செய்கிரவங்களை ..உங்கள் கவிதை மூலம் அவுட் ..ஆகிவிடீங்க ...பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  5. பிராணி வதையை இதைவிட யாரும் சிறப்பாக சொல்ல முடியாது, அகிலா!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி மேம்.....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...