Skip to main content

தமிழும் தமிழ் பெண்களும்...




இன்று கணவரின் Batchmate மகளின் திருமணம் திருப்பூரில். அவரை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது. சமாளிப்போம் என்று அழகாக போய் அமர்ந்தாச்சு...

இப்படிப்பட்ட கல்யாணங்களுக்கு போவதில் நிறைய சௌகரியம் இருக்கு...
வாய் வலிக்க பேச வேண்டியதில்லை...
போலித்தனமாய் சிரித்து வைக்க வேண்டியதில்லை...
நல்ல வேடிக்கை பார்க்கலாம்...

நிறைய பேர் வெட்டியாக சுற்றி கொண்டிருந்தார்கள். நாமளும் அப்படி வெட்டியாக உட்கார்ந்து பார்த்தால் தானே தெரிகிறது.  

ஒரே கலரில் பட்டு கட்டி நாங்கள் சாகும்வரை சகோதரிகள் என்று மூன்று பெண்மணிகள் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

saree யை flaot விட்டுக்கொண்டு ஒரு பெண் சுற்றி கொண்டிருந்தாள். நாமளும் இனி float ல் saree கட்டி பழகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

என்னை மாதிரியே தனியாக அமர்ந்து ஒருவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் போர் அடிக்க ஆரம்பித்தது....

சரி...போய் கிப்ட் கொடுத்துட்டு வரலாம் என்று எழுந்து போனேன்...கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவரையும் காணும்...நாமலே intro கொடுதுக்க்கலாம்னு போனேன்...

பெண்ணிடம் போய் நான்தான்...இப்படி...இப்படி.. என்று கூறினேன். அவள் உடனே, 'மாமா வரலையா அத்தை...மாமாவை திருப்பி மயிலாப்பூருக்கே போட்டுடாங்கலாமே...' என்று ஏதேதோ பேசிக்கொண்டே போக....நான் complete flat..

பெரும்பாலும் ஆன்டி, அங்கிள் என அழைக்கும் பெண்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். அழகாக தமிழில் அத்தை, மாமா என்று இப்போ இருக்கும் சிறு வயது பெண்கள் அழைத்து நான் கேட்டதில்லை..

அதுவும் அவள் என்னை நேரில் பார்த்ததில்லை...கேள்விபட்டிருக்கலாம் அவ்வளவுதான்....இது அவளின் பேச்சு சாமர்த்தியம், பழகும் சாமர்த்தியம் என்றெல்லாம் கூட சொல்லலாம். 

ஆனால் அந்த உறவின் பெயர்களை ஸ்டைல் காட்டாமல் நம் தமிழில் அழைத்த அந்த தன்மை புதிதுதான்...

அழகாக வளர்த்திருக்கிறார்கள் பெண்ணை....பாராட்டப்படவேண்டிய விஷயம்

தமிழும் இனிமைதான்...அதை அழகாய் பேசும் நம் ஊரு பெண்களும் இனிமைதான்...


Comments

  1. அழகான ஒரு சம்பவம்....
    இந்தக் காலத்தில் இப்படியும் பிள்ளைகளா

    அந்தப் தம்பதிகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கள் கண்டிப்பாக அவர்களை சேரும் ....நன்றி...

      Delete
  2. உண்மைதான் அகிலா, என் மகன்களும் “மாமி,மாமா” என்றுதான் எல்லாரையும் அழைத்துப் பேசுவார்கள். ஆண்ட்டி, அங்கிள்களால் நிறைந்த உலகத்தில் நகைப்புக்கு ஆளாகிறார்கள் என்றாலும் நான் மாற்ற முயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நல்லது தோழி...மகிழ்ச்சியை கொடுக்கும் வார்த்தைகள் அவை...

      Delete
  3. நாங்கலாம் தெரியாத கல்யாணத்துக்கு போனால், திருப்பி வரும்போது ஒரு இருபது பேரையாவது சொந்தகாரங்களா ஆக்கிவிட்டுதான் வருவோம். நண்பர்களை சொன்னேங்க... நல்லா சிரிச்சி பேசி புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்வோம். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா???

    அருமையான ஒரு அனுபவத்தை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பெண்களுக்கு பேச கற்றுக் கொடுக்க தேவையில்லை...பிறந்ததில் இருந்தே பேசிக்கிட்டுதானே இருக்கோம் (சாட்சி அப்பாவி கணவர்கள் )
      நன்றி ஆகாஷ்....

      Delete
  4. சிறு வயதில் அவர்கள் கற்கும் விஷயம்தான் அவர்களுக்கு கடைசிவரையிலும் பாடமாக இருக்கும்.பெற்றோர்கள் குழந்தைகள்முன் பேசும்போது தமிழிலேயே பேச வேண்டும்.
    உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி...

      Delete
  5. நாம் சொல்லுவதைதான் நமது பிள்ளைகள் சொல்வார்கள் அதில் நிச்சயம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி அவ்வாறு பேச சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கண்ணதாசன்...நாம் சொல்லிக் கொடுப்பதை போலதான் வளர்வார்கள்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...