Skip to main content

உழைக்கும் வர்க்கமும்...

உட்கார்ந்து சாப்பிடற வர்க்கமும்......





       நேற்று எங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன். நான்கு மாதங்களாக ஆர்.டி(RD) கட்டாததால் மொத்தமாக ஒரு ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றையும் ஆர்.டி கட்ட வேண்டி எழுதிய சிலிப்பையும் ஆர்.டி புத்தகத்துக்குள் வைத்து கையில், வெளியே தெரியும்படி வைத்திருந்தேன். திங்கள் கிழமை ஆதலால் ஐந்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்...எங்கள் பகுதியில் இதுவே பெரிய கூட்டம். இல்லை என்றால் ஈ ஆடிக்கொண்டிருக்கும் எங்கள் தபால் நிலையம்.


         நான் நான்காவதாக நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன் நின்றிருந்த பெண்மணி என்னை ஏற இறங்க பார்த்து விட்டு என் சுடி எங்கே எடுத்தேன், எவ்வளவு ஆச்சு, தைக்க என்ன ஆச்சு, லைனிங் கொடுத்திருக்கிறேனா என்றெல்லாம் விசாரித்து கொண்டிருந்தார்.

      அப்போது தான் அந்த பெண்மணி அவசரமாக உள்ளே வந்தாள். கையில் ஒரு form வைத்திருந்தாள். யாராவது கிடைப்பார்களா எழுதி கொடுக்க என்பது அவள் பார்வையில் இருந்தே புரிந்தது. யாரும் திரும்பவில்லை. நான் அவளை பார்க்கவும் என்னிடம் நீட்டினாள்.


    அட்ரஸ் எழுதி இருந்த ஒரு துண்டு தாளையும் நீட்டினாள். தன் பையன் ITI படித்து கொண்டிருப்பதாகவும் அவனுக்கு தான் ஐந்நூறு ரூபாய் பணம் அனுப்புவதாகவும் கூறிக்கொண்டிருந்தாள். எல்லாம் எழுதி கொடுத்தேன். 'செல்வி' என்ற தன் பெயரை கூட யாரோ சொல்லி கொடுத்த விதத்தில்தான் கையெழுத்து போட்டாள். நான் க்யுவுக்கு திரும்பும் போது இன்னொரு பெண்மணியும் அதில் சேர்ந்திருந்தார். அவருக்கு பின் போய் நின்று கொண்டேன்.

      ஏற்கனவே நின்று கொண்டிருந்த பெண்மணி என்னிடம் திரும்பி 'என்னங்க உங்க RD புக்குள்ளே ஆயிரம் ரூபாய் இருக்கா...பார்த்துக்கோங்க...' என்றார். பார்த்து விட்டு 'இருக்கே....ஏன் ? ' என்றேன்.


     'இவ என் பக்கத்து வீட்டில் தான் வேலை செய்கிறாள். அவ பார்வையே சரி கிடையாது. அதனால் நான் அவளை வேலைக்கு நான் வைத்து கொள்ளவில்லை. அதுதான் உங்களிடம் பணத்தை சரி பார்க்க சொன்னேன்' என்றார்.


     இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் நான் கையில் வைத்திருந்த RD புக்கையோ பணத்தையோ அந்த வேலைக்கார பெண்மணி கவனிக்கவில்லை. அவள் கவலை பணத்தை அனுப்புவதிலும் கொடுத்து விட்டு திருப்பி வேலை செய்ய ஒடுவதிலும் தான் இருந்தது. ஆனால் குறை சொல்லிய பெண்மணியின் கவனமோ என் உடை, என் கையில் இருந்த பணம் இதில் தான் இருந்திருக்கிறது.

'Idle Mind is a Devil's Workshop' ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.....

உழைக்கிற வர்க்கம் எவ்வளவோ மேல், உட்கார்ந்து சாப்பிடற வர்க்கத்தை விட....




Comments

  1. நல்லா சொன்னீங்க

    //உழைக்கும் வர்க்கமும்...
    உட்கார்ந்து சாப்பிடற வர்க்கமும்//

    தலைப்பும் சம்பவமும்.

    ஆம்மாம்....'Idle Mind is a Devil's Workshop'

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு மனப்பான்மை சமூகத்தில்.....கேட்டுட்டு சும்மாதான் வர முடிந்தது என்னால்...

      Delete
  2. சரியான பகிர்வுங்க... பாம்பின் கால் பாம்புதான் அறியும்.

    ReplyDelete
  3. இது போன்றோருக்கு உதவுவதை விட வேறு புண்ணியம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மனதிருப்தி நமக்கு....நன்றி கருணாகரசு....

      Delete
  4. சரியான கருத்து. சிலர் இப்படிதான் நம்மிடம் பேசும்போது நம் காது, கழுத்து, கை, என்று சதா நோட்டமிட்டுக்கொண்டே பேசுவார்கள். அதைப் பார்க்க நமக்கே கூசும். என்ன பிறவியோ! இதில் அடுத்தவர்களைப் பற்றிக் குறை வேறு. ம்! மனிதர்கள்!

    ReplyDelete
    Replies
    1. சில பெண்களின் குணத்தை மாற்றவே முடியாது, கீதமஞ்சரி........

      Delete
  5. சிலர் எல்லோரிடமும் குறை ஒன்றை மட்டும் கண்டுபிடிப்பார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //சில நேரங்களில் சில மனிதர்கள்//
      சரிதான் விச்சு....

      Delete
  6. //உழைக்கிற வர்க்கம் எவ்வளவோ மேல், உட்கார்ந்து சாப்பிடற வர்க்கத்தை விட....
    //

    100 % சரி

    ReplyDelete
  7. அது போல உள்ள பெண்களை அரிய வேண்டும் போல உள்ளது ...

    ReplyDelete
  8. //உழைக்கிற வர்க்கம் எவ்வளவோ மேல், உட்கார்ந்து சாப்பிடற வர்க்கத்தை விட....//

    நிச்சயமாக!.

    //ஆனால் குறை சொல்லிய பெண்மணியின் கவனமோ//

    இதை வீதியுடன் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை, இது வீட்டிற்குள்ளும் செல்லும் பொழுது அதன் பாதிப்புகள் வேறு விதமாக எதிரொலிக்கும் (உதா.. மாமியார் மருமகள் சண்டை, பிள்ளைகள் வளர்ப்பு etc..)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....எத்தனையோ வீடுகளில் பிரச்சனைகளுக்கு மூல காரணமே இந்த மாதிரி பெண்களின் குணம்தான்...

      Delete
  9. நல்ல பகிர்வு அகிலா!

    ReplyDelete
  10. நான் எதாவது சொன்னா தப்பாயிடும், அப்புறம் MALE CHAUVINISM அது இது னு பேசுவீங்க, உங்களில் பாதி பேர் இப்படிதாங்க ! கூடவே T V serial அது இது ந்னு, மொதல்லே அவங்களை சரி பண்ணூண்கொ அப்பறம் எங்களில் பாதி பேர் தான சரி ஆய்டுவான்? ஆனா இதையத்தை தொட்ட நிகழ்சி இது, அந்த கண்ணூக்கு தெரியாத பையன் நன்றாக படித்து தேர்ந்து அந்த ஏழை தாயை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறென் (கருணாகரன்)

    ReplyDelete
    Replies
    1. நான் ஒத்துகிறேன்.....பெண்தான் பெண்ணுக்கு எதிரியே....

      Delete
  11. நல்ல விதமாக நியாயத்தை கூறியுள்ளீர்கள் அக்கா நன்றி....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...