Skip to main content

பெண்கள் பலவிதம் 2....


திருமணத்திற்கு பின் பெண்...



பெண்கள்......ரொம்ப வித்தியாசமானவர்கள். எதையும் 90% குறுக்கு புத்தியுடன் தான் யோசிப்பார்கள்...அதுதாங்க Critical Reasoning ..இதையெல்லாம் நீங்க கேம்பஸ் இன்டர்வியூக்கோ , CAT எக்ஸாமுக்கோ தான் இதை படிப்பீர்கள்.....படித்த பெண்களை விட படிக்காத பெண்களின் மூளை ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும்.


தன் கணவரை எப்போதும் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிறைய காமெடி செய்வார்கள் வீட்டில். கல்யாணம் முடிந்து வரும் போதே ரொம்ப தெளிவா வருவாங்க. அவங்கம்மா நாலு தங்க வளையல் போட்டு அனுப்பிச்சா இவங்க கூட ஒரு நாலு கண்ணாடி வளையலையாவது வாங்கி மாட்டிக்குவாங்க....அப்போதானே வீட்டுக்காரர் பைக் ஸ்டார்ட் பண்ற சத்தத்தை மீறி இவங்க டாட்டா சொல்ற சத்தம் கேட்கும். இல்லேன்னா அவன் திரும்பிபார்க்காம போயிருவானே....





அவன் என்ன செய்வான்னா, அவனோட எல்லா பிரெண்ட்சையும் இவ கண்ணுலே காட்டமாட்டான். ஒண்ணு இவன் ஹிஸ்டரி அவன்கிட்டே இருக்கும், இல்லை இவன் பொண்டாட்டி கொஞ்சம் அழகா இருப்பாள். ஆனா அவ பயங்கர சமர்த்தியசாலியா இருப்பா. இவனோட அவ்வளவு பிரண்ட்ஸ் பேரையும் தெரிஞ்சி வச்சிருப்பா. எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது. வெள்ளிக்கிழமை ராத்திரி எவன் கூப்பிடுவான், சனிக்கிழமை எவன் கூப்பிடுவான்னு, எதுக்கு கூப்பிடுவான்னு அவளுக்கு தெரியும். அதனாலே கல்யாணமான நண்பர்களின் மனைவிகளின் செல் நம்பர் அத்தனையும் அவளுக்கு அத்துபடி. இவன் ஒருபக்கமும் எஸ்கேப் ஆகமுடியாம முழிப்பான்.




பிள்ளை பிறந்த பிறகு அடுத்த வஸ்திரத்தை உபயோகிப்பாள். அதுதாங்க, 'அப்படியே உங்களையே உரிச்சி வச்சிருக்கான்' என்பாள். இவன் அப்படியே flat. ஐயோ... பய புள்ள நம்ம செஞ்ச வித்தை எல்லாம் ஆரம்பிச்சிருவானோ என்று தினமும் பயந்து ஒழுங்கா பொறுப்பான அப்பனாகிவிடுவான். வேற வழி....




பிள்ளையை ஸ்கூல் சேர்த்த பிறகு, ரொம்ப தெளிவாகி, சும்மா தானே இருக்கேன், நிறைய செலவு இருக்கு, வேலைக்கு போறேனே என்பாள். கையில் ஒரு ஸ்கூட்டியுடன் சுதந்திரத்தையும் சேர்த்து வாங்கிக் கொள்வாள். இப்போ எக்னாமிக்களாகவும் அவகிட்டே சரண்டர் ஆகிடுவான். ஆல் அவுட்.......


அப்பாடா எவ்வளவு போராட்டம் ஒரு பெண்ணுக்கு..........ஒருத்தனை அடிமை ஆக்கிறதுக்குள்ள மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிடுது. இது வீட்டுக்காரருக்கு மட்டும்தான். மாமியார், மாமனார், நாத்தனார் இவங்களுக்கு எல்லாம் வேற வேற strategy யை பின்பற்றணும். என்ன பண்றது.... பொண்ணா பிறந்தாலே இப்படிதான் கஷ்டப்படணும்னு எங்க தலையில எழுதி இருக்கு......

..........இன்னும் எழுதுவேன்

Comments

  1. பொண்ணா பிறந்தாலே இப்படிதான் கஷ்டப்படணும்னு எங்க தலையில எழுதி இருக்கு......// உண்மைதான் சகோ இதுக்கு எல்லாம் கூட மசியாத ஆண்கள் இருக்காங்க .

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தானே சசி நாம இன்னும் போராடிக்கிட்டு இருக்கோம்.....

      Delete
  2. ஏங்க இப்படி உண்மையெல்லாம் போட்டு உடைச்சிட்டீங்க. கணவரை மடக்கவே இம்புட்டு கஷ்டம்னா?ஆனாலும் பெண்கள் படும் கஷ்டம் அதிகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதாவது புரிஞ்சிக்கிட்டிங்களே....thanx.....

      Delete
  3. இது பாராட்டா இல்ல தாக்குதலா, தாக்குதல் என்னும் அர்த்தம் அழகாய் மாறி பாராட்டு போல் தெரிந்தாலும் உண்மையில் இது ஆண் இனத்தின் அறியாமை மற்றும் புத்தியில்லாத தனத்தை படம்பிடித்து காட்டிவிடீர்கள் ..

    ReplyDelete
    Replies
    1. இதுதான் 'கால்கட்டு' என்பது. இதை அறியாமை என்று கொள்வதைவிட, உங்களின் வாழ்க்கை பாதையை சீரமைப்பதாக கூட எடுத்துக் கொள்ளலாமே.....

      Delete
  4. Replies
    1. ராஜேஸ்வரி....நாம செய்றதை தானே எழுதுவோம்....

      Delete
  5. //கையில் ஒரு ஸ்கூட்டியுடன் சுதந்திரத்தையும் சேர்த்து வாங்கிக் கொள்வாள்.//

    ரொம்ப பிடிச்ச வரி. எத்தனை சாகசங்களுக்குப் பிறகு, இந்த வரி சாத்தியமாகிறது என்பதுதான் வாழ்க்கையின் விசித்திரம். வாழ்க்கை நம்மீது நிகழ்த்தும் விளையாட்டிற்கான ஒரு பெண்மனதின் பதிலாக இந்த வரியைப் பார்க்கிறேன்.

    இன்னும் கூட அலசி ஆராய்ந்து, இன்னும் அழுத்தமாக பதிவு செய்யப்படும் அடுத்தப் பதிவை எதிர்பார்க்கிறேன்! ;))

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. //எத்தனை சாகசங்களுக்குப் பிறகு, இந்த வரி சாத்தியமாகிறது என்பதுதான் வாழ்க்கையின் விசித்திரம்///

      உண்மைதான் பாலு...இலகுவாக சொல்லி செல்கிறோம் சில விஷயங்களை, அதன் உள்ளிருக்கும் அழுத்தத்தையும் சுமையும் மறந்து.....
      நன்றி பாலு.....

      Delete
  6. //அவகிட்டே சரண்டர் ஆகிடுவான். ஆல் அவுட்......./// எப்படி ...இப்படி... இதுதான் அனுபவம் என்கிறது சொல்லாமல் சொல்லிவிடேர்கள் ஒரு சில மந்திரங்களும் உண்டு ......... கோவை அகிலா

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒரு அனுபவம்தான்....வீட்டு சாவிகொத்து கையில் எப்போதும் இருப்பதற்கு தான் இந்த முன் ஏற்பாடுகள் எல்லாம்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...