Skip to main content

புறாவும் சமாதானமும்...

பொதுவுடைமையாக...


நான் இல்லாத இந்த ஒரு மாத இடைவெளியில் 
என் விட்டு முற்றத்தின் மேல் தட்டில் 
நீயும் உன் துணையும் குடியும் குடித்தனமுமாய்
சுத்தப்படுத்த முடியாத அளவுக்கு 
சிறகுகளும் எச்சங்களும் மிச்சங்களுமுமாய் 
சரிசெய்ய ஒரு நாள் பொழுதாயிற்று எனக்கு 
பக்...பக்...என்ற சத்தத்துடன் மீண்டும் நீ 
நான் வந்தபிறகும் பயமில்லாமல் 
என் முன்னே கம்பியில் அமர்ந்து 
என்னையே உற்று நோக்கி 
'இது உன் வீடும் அல்ல, என் வீடும் அல்ல 
அரசாங்கத்திற்கு சொந்தமானது....
இருவருமே வாழுவோம் 
சண்டை மறந்து சமாதானமாய்....'
என்று சொல்லி நீ சென்ற பிறகுதான் புரிந்தது
பொதுவுடைமை தத்துவம் என்னவென்று...  

Comments

  1. புறாவுடன் பொதுவுடைமையா? பலே..

    ReplyDelete
  2. புறாவின் மூலம் தத்துவம், உங்களுக்கு மட்டும் அல்ல, நம் எல்லோருக்கும்......

    ReplyDelete
  3. புரிந்து கொள்ளுவதை புறாவிலிருந்து ஆரம்பிப்போம், உஷா...

    ReplyDelete
  4. போதுவுகடமை பேசிய புறாவை வாழ்த்திவிட்டு, என் நிஜமான கவலையை பதிவு செய்ய ஆசை! ? காணாமல் போன சிட்டு குருவியை தேடியழைத்து இன்னோரு முற்றத்தை ஒதுக்கி வரவேற்ப்பு அளியுங்களேன், புண்ணீயமாய் போகும்! நாங்கள் இங்கே (சென்னையில்) கன கச்சிதமாக ஒழித்துவிட்டொமில்லே?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஆசைதான்....எங்க கோயம்புத்தூரிலே இப்போ கட்டிடமா கட்டி சிட்டு குருவியை ஒழிக்க கங்கணம் கட்டி வேலை செய்றாங்க.....உங்க வேண்டுகோளை எங்க வீட்டிலேயாவது நிறைவேற்ற பார்க்கிறேன்....

      Delete
  5. வீடு கவர்மெண்ட் குவார்ட்டர்சா? கில்லி படத்துல வர்ற மாதிரி ”ஏங்க.. இந்த வீட்ட வித்துருவோமா? இது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்... ”பொதுவுடைமை தத்துவத்தை எளிமையா புரிய வச்சுட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. சென்னையில கவர்மென்ட் குவார்டர்ஸ் தான்...கில்லி படம்தான் எனக்கும் ஞாபகத்தில் வந்தது....அதனால் புறாகூட பொது ஒப்பந்தம் செய்துகிட்டேன் விச்சு.....

      Delete
  6. அருமை ...அருமை ...

    ReplyDelete
  7. வாழ்க பொதுவுடமை...

    அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர்...

      Delete
  8. வாழ்க புறா குடும்பத்துடன்!

    ReplyDelete
    Replies
    1. புறாவின் சார்பாக நன்றி....

      Delete
  9. புறாக்கள் அழகானவை. அவற்றுடன் பொதுவுடமை சமரச ஒப்பந்தம் செய்து கொண்டது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அடுக்கடுக்கா தீப்பெட்டி தீப்பெட்டியா நெருக்க நெருக்கமா இடைவெளியே இல்லாம பில்டிங்குகள் முளைச்சிட்டிருக்கற நகரத்தைப் பாத்து பெருமூச்சு விடற எனக்கு இந்தப் பதிவு ஆறுதல்!

    ReplyDelete
    Replies
    1. பறக்கும் இந்த உயிர்களை தினமும் பார்க்கவே சந்தோஷமாக உள்ளது....நன்றி கணேஷ்....

      Delete
  10. அழகான புரிதல். கவிதை சொல்லும் கருத்துக்குப் பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி.....

      Delete
  11. பொதுவுடைமை தத்துவம் சொன்ன விதம் அழகு

    ReplyDelete
  12. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்களின் வருகைக்கு....

      Delete
  13. மிக அருமை... புறா போன்ற பறவைகளுக்கு கிடைத்த சந்தோஷமான வாழ்கை மனிதனுக்கும் தந்தார் இறைவன்....பறவைகள் அதை அப்படியே வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறது....மனிதன் அதை தானே கெடுத்துவிட்டு அழுதுகொண்டிருக்கிறான்....யார் தப்பு இது?

    ReplyDelete
    Replies
    1. அது மட்டும் அல்லாமல் அதை விதி என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறான்....என்ன செய்வது?

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...