Skip to main content

கண்ணாமூச்சி


விளையாட்டு 




கண்ணை கட்டி சுற்றிவிடப்பட்டு
நிமிட நேரம் நின்று நிதானித்து 
பின் தேட கைகளை நீட்டும்போது 
தொடும் இடமெல்லாம் காற்றாய்
தோழிகள் எங்கேயென்று மனம் தேடும் 

சிரிப்பொலிகளில் 
கொலுசுகளின் சிணுங்கலில் 
வளையோசைகளில்
தாவணியின் சரசரப்பில் 
எங்கும் தோழிகளின் வாசம் 

கட்டை அவிழ்த்து பார்க்கும்போது 
காணவில்லையே யாரையும் 
வெகு நாட்களாய் சுற்றிவிட்டேனோ? 

கையில் கிடைப்பதும் காணாமல் போவதுமாக 
வாழ்க்கை முழுவதுமே இந்த 
 கண்ணாமூச்சி விளையாட்டு...



Comments

  1. வாழ்க்கை முழுவதுமே இந்த
    கண்ணாமூச்சி விளையாட்டு...
    ரசிக்க தகுந்த வரிகள் கவிதை அருமை தோழி

    ReplyDelete
  2. கண்ணை கட்டி சுற்றிவிடப்பட்டு
    நிமிட நேரம் நின்று நிதானித்து
    பின் தேட கைகளை நீட்டும்போது ...

    கையில் கிடைப்பதும் காணாமல் போவதுமாக
    வாழ்க்கை முழுவதுமே இந்த
    கண்ணாமூச்சி விளையாட்டு. //
    .
    எவ்வளவு பெரிய விசயத்தை எத்தனை அருமையாக
    எளிமையாக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்
    தங்கள் சிந்தனையின் ஆழத்தையும் மொழி லாவகத்தையும்
    கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி அவர்களே...

      Delete
  3. கையில் கிடைப்பதும் காணாமல் போவதுமாக
    வாழ்க்கை முழுவதுமே இந்த
    கண்ணாமூச்சி விளையாட்டு...
    என் பள்ளித் தோழிகள் கண்ணில் கிடைப்பதே இல்லங்க . அருமையான பகிர்வு .

    ReplyDelete
    Replies
    1. அதே வருத்தம்தான் இங்கேயும், சசி....

      Delete
  4. மிக நன்று! கண்ணாமூச்சி விளையாட்டில் தோழிகள் மட்டுமல்ல... நான் சில தோழர்களையும் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன். மனதில நின்றது உங்கள் கவித்திறன்!

    ReplyDelete
    Replies
    1. கிடைத்தால் சொல்லுங்கள்....
      நாங்கள் தொலைத்துவிட்டு தேடுகிறோம்
      கிடைக்கமாட்டார்கள் என்று தெரிந்தும்...
      பெண்தோழிகளை கண்டுபிடிப்பது கடினம்....
      நன்றி கணேஷ்....

      Delete
  5. காலத்தால் அழிந்த விடயங்களை
    கண்ணாமூச்சியுடன் ஒப்பிட்டமை
    அருமை சகோதரி..

    ReplyDelete
  6. தொலைந்து போனவை கிடைப்பதும்
    மறுபடியும் தொலைப்பதுமாக தானே
    வாழ்க்கை கண்ணாமூச்சி ஆடுகிறது.....
    நன்றி மகேந்திரன்....

    ReplyDelete
  7. வாழ்க்கைச் சக்கரத்தில் நிறைய நண்பர்கள் வருகிறார்கள்... போகிறார்கள்... வாழ்க்கை முழுவதும் வரும் நண்பர்கள் வெகு சிலராகவே இருக்கிறார்கள்... அதற்கு காரணம்... கவிதையில் நீங்கள் சொல்வது போல், நாம் ரொம்ப நாட்கள் கண்ணை கட்டிவிட்டு சுற்றியிருப்போம்... அல்லது அவர்கள் சுற்றியிருப்பார்கள்...

    ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் பதிவு எழுதுறீங்க... அடிக்கடி பதிவு எழுதுங்கள்... தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்
      நன்றி.....

      Delete
  8. இந்தக்கவிதையை வாழ்க்கைக்கு ஒப்பாக எடுத்துக்கொண்டாலும், ஒரு முதிர்கன்னியின் மன உளைச்சலாகவும் கொள்ள முடிகிறது. ஆம், பால்யகால, பருவகால விளையாட்டுகள் முடிந்துவிட்டன. தோழிகள் சென்றுவிட்டனர். அறியாதவளாய் இவள் இன்னும் காத்திருக்கிறாள், வாழ்க்கை விளையாட்டில். மனத்தைச் சுண்டியிழுத்தக் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அழகான மற்றுமொரு விளக்கம் கீதமஞ்சரி. அப்படியும் இருக்கலாம்.....
      நன்றி....

      Delete
  9. தோழிகளின் வாழ்க்கையும்,அது அலாத வாழ்கையும் இப்படித்தான் கண்ணாமூச்சு காட்டிக்கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் விமலன் அவர்களே.....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...