Skip to main content

குடும்பத்தின் முதுகெலும்பு பெண்கள்...ஆனால் பெண்களின் முதுகெலும்பு?


பெண்களுக்காக.......




              எலும்பு சம்பந்தமான மருத்துவமனை ஒன்றிற்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது. ஒரே ஒரு மருத்துவர் வைத்தியம் பார்க்கும் இடம் தான் அது. ஆனால் ஒரு கல்யாண வீடு போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் பெண்கள்....பெண்கள்.....

         ஏன் இந்த அவல நிலை பெண்களுக்கு....நாற்பது வயது முதல் தொண்ணூறு வயது பாட்டி வரை அங்கு பார்க்க முடிந்தது. பெரும்பாலான பெண்கள் பருமனாகவே இருந்தார்கள். நொண்டிக் கொண்டும், சரிந்து நடந்து கொண்டும், நடக்கவே முடியாமலும் எத்தனை விதமானவர்கள்....





             ஆண்கள் சற்று குறைவுதான். அப்படியே இருந்தாலும், பெரும்பாலானோர் விபத்தில் சிக்கி அதனால் எலும்பு சிகிச்சைக்கு வந்திருந்தார்கள்.   

             எழுபதுகளில் இருந்த ஒரு தம்பதியர், அங்கு வந்திருந்தனர். அந்த கணவர் தான் மனைவியை தாங்கி பிடித்து, கூட்டி வந்து, இருக்கையில் அமர வைப்பதும், இரத்த பரிசோதனைக்காக அழைத்து செல்வதும், மறுபடியும் அமர வைப்பதுவுமாக அருகிலேயே நின்று கவனித்து கொண்டிருந்தார். மனைவி மீது அவருக்கு இருந்த கரிசனம் என்னை ஆச்சரியப்படுத்தியது. 

                 என்னருகில் இருக்கை காலியானதும் வந்தமர்ந்தார்.  அவர் சொன்ன ஒரு உண்மை என்னை உறுத்தியது. 'பெண்கள் நோய் சிறியதாக இருக்கும் போதே சரிவர கவனித்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், வயது போன காலத்தில் உடன் வாழ்பவர்களுக்கு சிரமம்தான்.' என்று தான் இந்த தள்ளாத வயதில் படும் கஷ்டங்களை கூறிக்கொண்டிருந்தார்.

                  நம் பெண்கள் குடும்பத்திற்காக உழைக்கிறேன் என்று பெரிதாக அலட்டி கொண்டு, menopause  காலகட்டத்தில்   வரும் முதுகு வலி, கால் வலி, இடுப்பு வலி முதலியவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் கண்டபடி நிமிர்வதும், குனிவதும், எடை அதிகம் உள்ள பாத்திரங்களை தூக்குவதுமாக  முதுகெலும்பை ஒரு வழி பண்ணிவிடுகிறார்கள்.

              காலையில் வேலை பார்க்கும் பரபரப்பில் சாப்பிடாமலே இருந்து, பிறகு 11  மணி அளவில் சாப்பிடுவதும்,  மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்குவதும், மாலை வேளையில் 'வாக்கிங்' என்ற போர்வையில் அக்கம் பக்கம் பெண்களுடன் கதை பேசிக் கொண்டே ஆமை வேகத்தில் நடந்து விட்டு வருவதும் உடம்பு சதை போடுவதற்கு காரணமாகிறது. 

                 வேலை செய்யுங்கள். குடும்பத்தை கவனியுங்கள். ஆனால் உங்களையும் சற்று பார்த்து கொள்ளுங்கள். அழகாக இருக்க வேண்டும், உடம்பை slim  ஆக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது பணக்காரத்தனமோ பகட்டுதனமோ இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   




                    நாம் சரியான முறைகளில் அமருவதோ, நடப்பதோ, படுப்பதோ இல்லாமல், நம் எலும்புகளையும் மூட்டுகளையும் பாடாய்ப்படுத்துகிறோம். ஒரு வரம்புக்கு மேல் அவை நம்மை பாடாய்ப்படுத்துகிறது. 






                    அறுபது வயதுகளில் அமைதியாய் போகவேண்டிய முதிர் காலம் மருத்துவமனை படிகளில் ஏறி இறங்குவதில் கழிகிறது. நம்முடைய துணைவருக்கும், பிள்ளைகளுக்கும் துன்பத்தையும் கவலையையும்   கொடுக்கிறோம். 

                  40+ வயதுகளில் பெண்களுக்கு மாதவிடாய் (menopause) சமயங்களில் ஏற்படும் hormone மாற்றங்கள், அதிக அளவிலான இரத்தபோக்கு, கால்சியம் குறைபாடுகள், அதனால் எலும்புகளில் உண்டாகும் தேய்வு என்று இயற்கையே சதி செய்ய காத்து கொண்டிருக்கும் போது, நாமும் அதற்கு வாகாக உடல் எடையை அதிகரித்து கொள்வதும், முதுகெலும்பிற்கும் , மூட்டு எலும்புகளுக்கும் அதிக உழைப்பை கொடுப்பதும் சரியல்ல.

                   நம்முடைய மன உளைச்சலும் (மகளின் திருமணம், மகனின் வேலை, பிள்ளைகளின் பிடிவாதங்கள், வந்த மருமகளின் மெத்தனம்) இந்த மாதிரி எலும்பு வலிகளுக்கு ஒரு காரணமாக இருப்பதால்,  அதிலிருந்து உங்களை சற்று விடுவித்து பாருங்கள். அமைதியை உங்களுக்குள் கொண்டு வாருங்கள். வலி குறைகிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் மருத்துவரை அணுகுங்கள்.



மருத்துவரை பார்க்க போகும் பெண்களுக்கு :

கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி என்று மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்.


  • மருத்துவர் உங்கள் கால்களை உயர்த்தி, மடக்கி எல்லாம் பரிசோதனை செய்வார். அதனால், சேலையை தவிர்த்து சுடிதார் அணிந்து செல்லுங்கள். உங்களுக்கும், உங்களை சோதிக்கும் மருத்துவருக்கும் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்கலாம். 'சேலைக்குத்தான் என் ஓட்டு' என்றால், கண்டிப்பாக உள்ளாடை (panties ) அணிந்து செல்லுங்கள். இதை படிக்கும் ஆண்கள் உங்கள் விட்டு பெண்களிடம், அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி யாராக இருந்தாலும் அவர்களிடம் கூறுங்கள்.
  • MRI  scan எடுக்கும் இடத்திலும்  இதே நிலைமைதான். நம் உடைகளை களைந்து (except  panties ) அவர்கள் தரும் nightie  யைத்தான் அணிய சொல்வார்கள். கவனத்தில் கொள்ளுங்கள்.












Comments

  1. நல்ல பதிவு & நல்ல அறிவுரை

    ReplyDelete
  2. நல்ல விழிப்புணர்வுப் பதிவு. நம் பெண்கள் சின்னச் சின்ன நோய் என்றால் சுயவைத்தியம் செய்து கொள்வார்கள். முடியாமல் போகும் பட்சத்தில்தான் கணவரிடம் கூறி டாக்டரைப் பார்க்கிறார்கள் என்பது என் மனக்குறை. உங்கள் கட்டுரையில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று. நனறி!

    ReplyDelete
  3. மூன்று நாட்களாக அந்த மருத்துவமனையில் கண்ட காட்சிகள் தான் என்னை எழுத தூண்டியது. என்னுள் பட்டதை பதித்தேன். நன்றி....

    ReplyDelete
  4. me and my back, lifting procedures
    எல்லாம் ரொம்ப உபயோகமான தகவல்கள் சகோதரி....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...