புத்தகங்களும் அணிந்துரைகளும்
ஒரு வாசகரின் அனுபவம்  எனது பயண நூல் 'இங்கிலாந்தின் நதிக்கரையில்' புத்தகத்தை வாசித்த வாசகர் ஒருவர், என்னிடம் பேசியிருந்தார். அவர் அதிகம் சிலாகித்தது, புத்தகத்தை விட, அதை வாசிக்கத் தூண்டிய முன்னுரையைக் குறித்துதான்.  அவர் சொன்ன சில விடயங்களை இங்கு சொல்கிறேன்.  1. ஒரு வாசகனாக, தான் எந்த புத்தகத்தை வாங்குவதற்காக கடைக்கு அல்லது புத்தகக் கண்காட்சிக்குச் சென்றாலும், புத்தகத்தைப் புரட்டும்போது, யாராவது அதுகுறித்து வெளி அட்டையில் அல்லது உள்ளே உரையில் ஏதேனும் எழுதியிருக்காங்களா என்று பார்ப்பது வழக்கமாம். அது தன்னை impress செய்தால் நிச்சயமாக வாங்கிவிடுவது உண்டாம். இல்லையென்றாலும் புத்தகத்தின் ஈர்ப்பு காரணமாக வாங்குவது உண்டாம்.  2. இன்றைக்கு இருக்கும் பல புத்தகங்களில் அணிந்துரையில் எழுதுபவர்கள், புத்தகத்தைக் குறித்து எழுதுவதை விட, அதை எழுதிய ஆசிரியரைப் பாராட்டியே அதிகம் எழுதுவதாகக் குறையும் பட்டுக்கொண்டார். இதையெல்லாம் ஒரு வாசகரின் வழி கேட்கும் போதுதான், நமக்கும் உரைக்கிறது.  3. கையில் இருக்கும் பணம் புத்தகம் வாங்க போதவில்லையென்றால், பார்த்து வைத்துவிட்டு அடுத்த மாதம் வந்து...




